எண்ணற்ற பறவைகள் மரங்களிடையில் அங்கும் இங்குமாக பறந்து விளையாடுகின்றன. இந்த அதிகாலையில், அவற்றின் இனிய குரல், பாட்டோலியாகுகின்றது. நகரத்தில் உலா வரும் போது, கட்டிடங்கள் வரிசையாகத் தென்படுகின்றன, அகலமான சாலைகள் நீண்ட தூரம் நீடிக்கின்றன என்பது, கண்களில் தென்படுகின்றது. ஆற்றங்கரையோரத்தில், மாடுகளும் குதிரைகளும் காணப்படுகின்றன.
ஆனால், பத்து ஆண்டுகளுக்கு முன்பு அங்கு நிலைமையே வேறு! அப்போது, பெருமளவு மண் இடிந்து விழுந்ததினால், மியாரோ நகரில் அடிக்கடி மண் சரிவு நிகழ்ந்தது. மரங்கள், அளவுக்குமீறி வெட்டப்பட்டமை, இதற்குக் காரணமாகும்.
இத்தகைய நிலைமையில் தான், மரங்களை வெட்டக்கூடாது என்று, சில ஆண்டுகளுக்கு முன் உள்ளூர் அரசு கட்டளை பிறப்பித்துள்ளது. மரம் வெட்டுதல், மரத் துண்டு விற்றல் ஆகியவற்றினால், வாழும் மியாரோ நகரவாசிகளைப் பொறுத்த வரை, இது, தயரமானது தான்! இந்நிலையில், வேலை வாய்ப்பினை ஏற்பாடு செய்து தரும் வகையில், நகர அரசு, தொழில் கட்டமைப்பைச் சரிப்படுத்தத் துவங்கியது. 1 2 3
|