முதலில், உள்ளூர் உயிரின வாழ்க்கைச் சூழலை மீட்டெடுக்க, ஒரு பகுதி மரம்வெட்டும் தொழிலாளர்கள், மரம் நடுவோராவதற்கு ஆதரவு அளிக்கும் கொள்கையை, அரசு வகுத்துள்ளது. இச்சிறு நகரில் மரங்களை நட, முன்னாள் மரம் வெட்டும் தொழிலாளர்கள், நாள்தோறும் வனக்காடு வளர்த்து பாதுகாக்கின்றனர். சில ஆண்டுக்கால முயற்சிக்குப் பின், மியாரோ நகரம் மாற்றமடைந்துள்ளது.
Li Zhongfu என்பவர் மியாரோ நகர் வனத்தொழில் பணியகத்தில் 9 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்தார். அப்போது இச்சிறு நகரம், மிகவும் மலடாகத் தென்பட்டது. ஆனால், இப்போது நிலைமை மாறி விட்டது. செயற்கை வனம் உருவாகியுள்ளது. பச்சைப்பசேலன்று மரங்கள் வளர்ந்துள்ளன. சுற்றுச்சூழல் மேம்பட்டுள்ளது என்று அவர் கருதுகிறார்.
1 2 3
|