சீனாவின் சிங்கியான் விகூர் தன்னாட்சி பிரதேசம், ஐரோப்பிய-ஆசிய கண்டத்தின் நடுபகுதியில் அமைந்துள்ளது. இது, பல இன மக்கள் குழுமி வாழும் பிரதேசமாகும். அதன் மக்கள் தொகை மொத்தம் ஒரு கோடியே 80 லட்சத்துக்கு அதிகமாகும். இதில், சிறுப்பான்மை தேசிய இன மக்கள் தொகை, சுமார் ஒரு கோடியே 10 லட்சமாகும். 2002ம் ஆண்டின் இறுதிவரை, முழு பிரதேசத்திலும் 9000க்கு அதிகமான பள்ளிகள் உள்ளன. மாணவர்களின் எண்ணிக்கை, 43 லட்சத்து 50 ஆயிரமாகும். இதில், சிறுப்பான்மை தேசிய இன மாணவர்கள் 60 வழுகாடு வகிக்கின்றனர். சிங்கியாங்கின் துவக்கப்பள்ளிக்கூடங்களிலும், இடைநிலைப்பள்ளிக்கூடங்களிலும், ஹென், விகூர், ஹசாக், ரஷிய உள்ளிட்ட 7 மொழிகள் மூலம் பாடம் சொல்லிக்கொடுக்கப்படுகின்றது. உண்மையான பல இன கல்வியாக இது, விளங்குகின்றது. இதனால், சிறுப்பான்மை தேசிய இன கல்வியின் வளர்ச்சியை விரைவுப்படுத்துவது என்பது, தன்னாட்சி பிரதேசத்தின் முக்கிய கடமையாகும்.
சிங்கியாங்கின் நிதானமான வளர்ச்சியில், கல்வியின் தகுநிலை அலட்சியம் செய்யப்பட முடியாதது. குறிப்பாக, சிறுப்பான்மை தேசிய இன கல்வியின் தரத்தை உயர்த்துவது மிக முக்கியமானது. சிங்கியான் விகூர் தன்னாட்சி பிரதேசத்து கல்வி துறைத்தலைவர் Zhao De Zhong செய்திமுகவரிடம் கூறியதாவது:
சிங்கியாங்கின் வளர்ச்சி, நிதானம், எதிர்காலம் ஆகியவை, கல்வியை சார்ந்திருக்கின்றன. தற்போது, சிங்கியாங்கில், சிறுப்பான்மை தேசிய இன கல்வி, 70 விழுக்காட்டை வகிக்கின்றது. இதனால், அதன் தரத்தை உயர்த்துவது என்பது, முழுசிங்கியான் கல்வியின் வளர்ச்சிக்கான கோரிக்கையாகும் என்றார் அவர்.
1 2 3
|