தமது இன மொழியை பயன்படுத்தும் அதே வேளையில், சீன மொழியையும் கற்றுக்கொள்வது எனும் இரு மொழி கல்வி, சிறுப்பான்மை தேசிய இன கல்வியின் திறவுக்கோளாகும். பல்வேறு இனங்களுக்கிடையிலான பரிமாற்றத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தி, சிங்கியாங்கின் சமூக நிதானத்தை நனவாக்குவதற்கு, இது, முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த நூற்றாண்டின் 50ம் ஆண்டுகளில், சிறுப்பான்மை தேசிய இன பிரதேசத்தில் சீன மொழிக்கல்வியை நடத்துவதென, தன்னாட்சி பிரதேசம் முடிவு செய்தது. தற்போது, சீன மொழி படிப்பின் இன்றியமையாத தன்மையை, சிறுப்பான் தேசிய இன மக்களும் அறிந்துகொண்டுள்ளனர். 赵德忠 மேலும் கூறியாதவது:
ஆங்கில மொழி தெரியாவிட்டால், உலகிற்கு செல்ல முடியாது. சீன மொழி தெரியாவிட்டால், சிங்கியான்யிலிருந்து சீனாவின் இதர பிரதேசங்களுக்குச் செல்ல இயலாது என, மக்கள் பொதுவாக அறிந்துள்ளனர். அறிவியல் தொழில் நுட்பம் வளர்ந்து, தகவல் அதிகமாக இருக்கும் இக்காலத்தில், மிகவும் முன்னேறிய கல்வியறிவை சிறுப்பான்மை தேசிய இன மொழியில் மொழி பெயர்க்க முடியாததால், இரு மொழி கல்வி வரவேற்கப்படுகின்றது. சீன மொழியை கிரகித்துக்கொண்ட அதிகாரிகளின் கல்வி அறிவு உயர்த்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
1 2 3
|