தீவில் அதிக எண்ணிக்கையிலான பறவைகள் தங்கியிருப்பதன் காரணமாக அது புகழ்பெற்றுள்ளது. மேற்கிலுள்ள தீவின் பெயர் ஹெய்சி மலை. ஒட்டகத்தின் முதுகு வடிவத்திலான இத்தீவின் பரப்பளவு சுமார் 0.3 சதுர கிலோமீட்டராகும். கிழக்கிலுள்ள தீவின் பெயர் ஹெய்சிபி. அதன் பரப்பளவு சுமார் 4.6 சதுர கிலோமீட்டராகும். ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஏப்ரல் திங்கள், பறவைகள் வரும் காலமாகும். அவை வந்த உடனே, ஓய்வு பெறாமல், மும்முரமாகப் புல், மரக்கிளை ஆகியவற்றைக் கௌவி, புதிய கூட்டை அமைக்கின்றன. பல லட்சம் பறவைகள் காலை முதல் இரவு வரை, பறந்துவந்து இறங்கி, கூடுகளை அமைக்கின்றன. சற்று நேரத்துக்குப் பின் தீவு முழுவதிலும் பறவைக் கூடுகள் நிறைந்து காணப்படுகின்றன. அப்பொழுது முதல் அக்டோபர் திங்கள் வரை அவ்விடம், பறவைகளின் தேவலோகமாகும்.
தொலைவிலிருந்து இத்தீவைப் பார்க்கும் போது, யாத்திரை செய்யும் மதத்ததவர் போல, பறவைகள் நீ முந்தி, நான் முந்தி எனப் பறக்கின்றன. அவற்றில் சில, தலை நிமிர்ந்து ஆகாயத்தைப் பார்க்கின்றன அல்லது தலை குனிந்து, அரைத் தூக்கத்தில் இருக்கின்றன. வேறு சில, இறகை விரித்துப் பறக்கத் தயாராயிருக்கின்றன அல்லது மெதுவாக அசைந்து நடக்கின்றன என்பதைக் காணலாம். இத்தீவில் வேறுபட்ட வடிவப் பறவைக்கூடுகள் நிறைந்துகாணப்படுகின்றன. பறவை முட்டைகள் இருப்பதன் காரணமாக, கால் வைக்க இடம் இல்லை. பயணிகள் அவற்றைக் கவனமாகத் தவிர்க்க வேண்டும். பறவைக் கூடுகளுக்கு அப்பால் இருக்க வேண்டும். இல்லாவிடில், வானில் பறக்கும் பறவைகள், குண்டு வீச்சு விமானங்களைப் போல, பயணிகளை நோக்கித் தாக்குதல் தொடுக்கும். இத்தீவில் பறவைகள் சில நேரத்தில் கூட்டம் கூட்டமாகப் பறந்து வானில் ஒலி எழுப்புகின்றன. பெய்சிங்கிலிருந்து வந்த பயணி செய்சின் அம்மையார் கூறியதாவது, சிங்காய் ஏரி எழில் மிக்கது. மிக அதிகமான பறவைகள் உள்ளன. அவை, மனிதருடன் அன்னியோனியமாக இருக்கின்றன. ஒரு வகை கடற்பறவை அதிகமாக உள்ளது. பல பறவைகள், முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. நிழற்படங்களை எடுத்தோம் என்றார் அவர்.
1 2 3
|