வெய்ஹைய் நகரை விட்டு வெளியே சென்றால் மேலும் அழகான காட்சி உங்கள் கண்களுக்கு முன் தென்படுகின்றது. வெய்ஹைய் கடலோரத்தில் சுமார் பெரியதும் சிறியதுமாக 100 தீவுகளும் 30க்கும் அதிகமான அழகான விரிகுடாக்களும் உள்ளன. பசுமையான மலைகளும் நீல நிறமுடைய கடலும் ஆகாயமும் எழில் மிக்க காட்சியை உருவாக்கியுள்ளன. வெய்ஹை நகரப் பகுதிக்கு அருகிலுள்ள லியூகுன் தீவானது, சீனாவின் முக்கியமான பிரபல காட்சித் தலமாகும். கடற்பரப்பிலான கடவுள் மலை என்று அது அழைக்கப்பட்டுவருகின்றது. இத்தீவில் காட்டுப் பரப்பின் விகிதம் 85 விழுக்காடாக விளங்குகின்றது. பல்வகை அரிய விலங்குகளும் தாவரங்களும் அங்கு வளர்கின்றன. இத்தீவில் பல்வேறு பண்பாட்டுக் காட்சிகளும் தனிச்சிறப்பியல்பு வாய்ந்தவை. ஆயிரம் ஆண்டு வரலாறுடைய பண்பாட்டு மரபுச் சிதலங்களும், சீனாவின் அண்மை காலத்திலான முதலாவது கடற்படையான பெய்யாங் கடற்படைப் பள்ளி, பண்டைக்காலப் பீரங்கி மேடை, இரும்புத் துறைமுகம் ஆகியவையும் கண்டுகளிக்கலாம். லியூகுன் தீவைப் பார்வையிட்ட பின், இத்தீவிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சன்ஸுவெய்குவான் காட்சித் தலத்துக்குச் சென்று மிகப் பரந்த காட்டைக் கண்டுகளிக்கலாம். இக்காட்டில் மிக உயரமான மரங்கள் பல உள்ளன. அவற்றில் ginkgo மரம், ஆயிரத்துக்கும் அதிகமான வயதுடையது. வழிகாட்டி லியுதென் கூறியதாவது,
இம்மரமானது, ஆயிரத்துக்கும் அதிகமான ஆண்டு வரலாறுடையது. ஆண் மரமும் பெண் மரமும் ஒரே மர வேரில் வளர்வதன் காரணமாக, இம்மரம் தம்பதி மரமென அழைக்கப்படுகின்றது. 100 ஆண்டு வரலாறுடைய மரத்துக்கு ஆத்மா உண்டு என்று கூறப்படுகின்றது. இம்மரத்தில் விளையும் அனைத்து கனிகளும் இரட்டை மரக்கன்றுகளாகும். அதாவது, ஆண் மரமும் பெண் மரமும் ஒரே கொட்டையில் உள்ளன. இது உலகில் காண்பது அரிது. இம்மரம், எங்களுடைய சன்ஸுவெய்குவா காட்சித் தலத்தில் செல்வம் என்று சொல்லலாம் என்றார் அவர்.
1 2 3
|