• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-10 00:04:31    
வெய்ஹைய்  நகரம்

cri

லியூகுன் தீவைப் பார்வையிட்டு, மலையில் ஏறிய பிறகு உங்களுக்குக் களைப்பாக இருக்கக் கூடும். அப்படியானால், நீங்கள், சூடான ஊற்று நீரில் குளிக்கலாம். ஏனெனில், இங்குள்ள சூடான ஊற்று நீரில் குளித்தால், களைப்பு போய்விடும். இது மட்டுமல்லை, நோயும் நீங்கிவிடும். வெய்ஹைய் நகரில் இத்தகைய சூடான ஊற்று நீர் அதிக அளவில் உள்ளது. ஆற்றங்கரையில் சில இடங்களில் சூடான ஊற்று நீர் வெளியே பாய்ந்து ஓடுகின்றது. மக்கள் அவற்றின் அருகில் குழியொன்றைத் தோண்டி, சூடான ஊற்று நீரைத் தேக்கி குளிக்கலாம். சூடான ஊற்று நீர் பற்றி நன்கு ஆராய்ச்சி செய்யும் திரு வாங்ஹுவெய் கூறுகிறார், வெய்ஹைய் நகரில் சூடான ஊற்று நீர் நிறைந்து காணப்படுகின்றது. நகரப்பகுதியில் பத்துக்கு மேலான இடங்களில் இத்தகைய ஊற்று நீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், அதாவது தாங் வமிசக் காலம் முதல் இதுவரை சூடான ஊற்று நீரைப் பயன்படுத்திவருகின்றோம். வெய்ஹைய் நகரில் நல வாழ்விடங்கள் பல உள்ளன. சீனாவின் இதர பிரதேசங்களிலிருந்து பலர் வருகை தந்து சூடான ஊற்று நீரைக் கொண்டு குளிக்க விரும்புகின்றனர். இது மிகவும் நல்லது என்றார் அவர். தற்போது, சூடான ஊற்று நீரை வீட்டிற்குள் கொண்டுசெல்ல முயலும் திட்டப்பணியில் வாங்வெய் ஈடுபட்டுவருகின்றார். அவருடைய திட்டம் நிறைவேறினால், மக்கள் வீட்டில் இருந்துகொண்டே சூடான ஊற்று நீரில் குளிக்கலாம்.

கடந்த சில ஆண்டுகளில், வெய்ஹைய் நகருக்கு வருகை தருவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், இந்நகரில் சுற்றுலா வசதிக்கான கட்டுமானப் பணி தொடர்ந்து தீவிரமடைந்துவருகின்றது. இந்நகரில் விருந்தினர் விடுதிகள் பல மலை அடிவாரத்திலும் கடற்கரையிலும் கட்டியமைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் அமைதியானது. சேவை தரமுடையது. துங்சான் விருந்தினர் விடுதியின் தலைமை மேலாளர் லியூ ச்சியெபிங் கூறியதாவது, தனிப்பட்ட முறையில் கவனித்துச் சேவை புரிவதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றோம். குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகப் பயணிகளின் பழக்க வழக்கங்களை முன்கூட்டியே அறிந்துகொண்டு, ஆராய்ந்து, அவர்களின் தனிச்சிறப்பியல்புக்கிணங்க, அவர்களுக்குச் சிறப்பு சேவை புரிகின்றோம். இவ்வாறு செய்வதால், இங்கு வருகை தருவோருக்கு வீட்டில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இவ்வீடு, தமது சொந்த வீடு போல உணர்வர் என்றார் அவர்.

வெய்ஹைய் நகரில் இயற்கை காட்சி எழில் மிக்கது. சுற்றுச்சூழல் சிறந்துவிளங்குகின்றது. காலநிலை, மனிதருக்குத் தகுந்தது. இதனால், பயணிகள் பலர், இந்நகரில் நிரந்தரமாக வசிப்பதற்காக, வீடு வாங்குவது பற்றி தம்முடன் தொடர்புகொண்டிருப்பதாக லியூ ச்சியெபிங் கூறினார். வெய்ஹையில் சுற்றுலா வசதி. பெய்ஜிங்கிலிருந்து இந்நகருக்கு நேரடியாகச் செல்லும் தொடர் வண்டியும் விமானமும் உள்ளன. ஆகையால் நேரம் கிடைக்கும் போது வெய்ஹைய் நகருக்குச் சென்று பார்வையிடுவது நல்லது.


1  2  3