Luobudanzeng என்பவர், தெற்கு திபெத்தின் சிகாச்சே பிரதேசத்து Bai Lang மாவட்டத்திலுள்ள ஒரு சாதாரண விவசாயியாவார். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, அவர் தமது ஊரில் முதலாவது பார்லி பதனீட்டு ஆலையை நடத்தினார். இவ்வாலையின் பார்லி பதனீட்டுப் பொருட்கள், திபெத் குடும்பங்கள் அனைத்துக்கும் தெரிந்தவை. திபெத் இன விவசாயி Luobudanzengஉம் அவரது பார்லி பதனீட்டு ஆலையும் என்ற தலைப்பில், திபெத்திலுள்ள எமது செய்தியாளர் Deqingbaizhen அனுப்பிய செய்தியை இப்போது கேளுங்கள்.
"இப்போது நான், பார்லி பதனீட்டு ஆலையில் செய்திகளைச் சேகரிக்கின்றேன். தற்போது திபெத்தில் கடும் குளிர். இருப்பினும், இவ்வாலையில் ஒரே விறுவிறுப்பாக வேலை நடக்கிறது. ஆயிரத்துக்கும் அதிகமான சதுரமீட்டர் பரப்புடைய இவ்வாலையில், பல்வேறு பதனீட்டு இயந்திரங்கள் தீவிரமாக உற்பத்தியில் ஈடுபடுகின்றன. ஆலையின் வாசலில், பதனிடப்பட்ட பார்லி பொருட்கள் நிறைய ஏற்றப்பட்ட சரக்கு வண்டிகள் வரிசையாக நின்று, ஆலையை வீட்டு வெளியேறி திபெத்தின் இதர பிரதேசங்களுக்குச் செல்கின்றன. இத்தகைய காட்சி, கடும் குளிர்க்காலத்திலும் மக்களுக்கு தெம்பூட்டுகிறது." என்றார் அவர்.
1 2 3
|