இவ்வாலையின் உரிமையாளர், விவசாயியான Luobudanzeng ஆவார். அவர் வாழும் Bai Lang மாவட்டத்தில் வளமான நிலம், நிறைய மழை. இது திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் முக்கிய வணிக தானிய உற்பத்தித்தளமாகும். இங்கு விளையும் பார்லி, தரமானது என்பதால் புகழ்பெற்றுள்ளது. ஆனால், Luobudanzeng குடும்பத்துக்கு நிலம் குறைவு. உழைக்கக்கூடிய ஆற்றல் பெற்றோர் அதிகமில்லை. விளைநிலத்தில் கிடைக்கும் வருமானம் போதாமல், சுமாரான வாழ்க்கை நடத்தினர். இந்நிலையை மாற்றும் பொருட்டு, அவர் வெளியூர் சென்று பணி புரியத் துவங்கினார். கடன் வாங்கி ஒரு லாரியை பெற்று போக்குவரத்துத் தொழிலில் ஈடுபட்டார். இருந்த போதிலும், இது, குடும்ப வாழ்க்கையை வளமடையச் செய்யவில்லை. 1 2 3
|