• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-25 21:49:49    
புல்வெளியில் புதிய எரியாற்றலின் பயன்பாடு

cri

உள் மங்கோலியாவின் கால் நடை வளர்ப்புப் பிரதேசங்களில், சூரிய வெப்ப ஆற்றல், காற்று ஆற்றல் ஆகிய புது முறை எரியாற்றலின் வெற்றிகரமான வளர்ச்சியும் பயன்பாடும், உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. தற்போது, அமெரிக்கா, நெதர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுடன் பல ஒத்துழைப்பு திட்டப்பணிகளை உள்மங்கோலியா நடத்தியுள்ளது. 2004ஆம் ஆண்டின் துவக்கத்தில், Dong wuzhumuqin Banner அரசு, ஸ்பெயினுடன் இணைந்து, கால் நடை வளர்ப்புப் பிரதேசங்களில் சூரிய வெப்ப ஆற்றல் மின்னாக்கி முறையை பரவலாக்கியுள்ளது. ஒரு கோடி யுவான் முதலீடு உள்ள இத்திட்டப்பணியில், 2004ஆம் ஆண்டின் ஏப்ரல் திங்களில், முதல் தவணை மாதிரிக்கென 7 இடையர் குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இப்போது, இம்மின்னாக்கி முறை இயல்பாக இயங்குகின்றது. இப்புதிய மின்னாக்கி முறையில் இடையர்கள் ஆர்வம் கொள்கின்றனர். இரண்டாவது தவணை மாதிரியில் சேர, இடையர்கள் ஆக்கப்பூர்வமாகப் பதிவு செய்கின்றனர். அண்மையில், 60 இடையர் குடும்பங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

புதிய சூரிய வெப்ப ஆற்றல் மின்னாக்கி முறையினால் ஏற்படும் நன்மையை Chaolun Bater முழுமையாக அனுபவிக்கின்றார். கால் நடை வளர்ப்புப் பிரதேசத்தில், சூரிய ஒளி அதிகம். சூரிய வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வது என்பது பயன்படக்கூடியது என்று அவர் கூறினார். அவர் கூறியதாவது:

"சூரிய வெப்ப ஆற்றல் மின்னாக்கி முறையின் செயல் திறன் அமைதியாக உள்ளது. தனிப்பட்ட காற்று வள மின்னாக்கியை விட இது மேம்பட்டுள்ளது. கடந்த சில திங்களில் இப்புதிய முறையை நான் பயன்படுத்தினேன். மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. மேலும் இதை எளிதாக இயக்க முடியும். இடையர்கள் இதை வாங்க விரும்புகின்றனர்." என்றார் அவர்.

கடந்த சில ஆண்டுகளில், புதிய சுத்தமான எரியாற்றல் தொழில் நுட்பங்கள் பலவற்றை உள்மங்கோலியத்தன்னாட்சிப் பிரதேசம் வளர்த்துள்ளது. இப்புதிய தொழில் நுட்பங்களின் பரவலால், இடையர்களின் வாழ்க்கை மாறி வருகின்றது என்று Dong wuzhumuqin Banner அறிவியல் தொழில் நுட்ப சங்கத்தின் தலைவர் Chaoke Saiyin கூறினார். அவர் கூறியதாவது:

"Dong wuzhumuqin Bannerயின் இடையர்களைப் பொறுத்த வரை, எண்ணெய் விளக்குப் பயன்படுத்தப்பட்டது முதல், 1980ஆம் ஆண்டின் இறுதியில் காற்று வளம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்தல் பயன்பட்டு, 21ஆம் நூற்றாண்டில் சூரிய வெப்ப ஆற்றல் பலகை பயன்பட்ட வரை, புதிய எரியாற்றலின் பாய்ச்சல் நனவாகியுள்ளது. இடையர்களின் வாழ்க்கை பெரும் மாற்றமடைந்துள்ளது." என்றார் அவர்.

புதிய மின்னாக்கி தொழில் நுட்பத்தின் பரவலுடன், விரைவில், புல்வெளியில் வாழ்கின்ற இடையர்கள், Chaolun Baterயின் குடும்பம் போல், மேலும் இன்பமாக வாழ்வர் என்று கற்பனை செய்ய முடியும்.


1  2  3