
லியு யாங் ஆற்றிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவு சென்றால், இவ்வாற்றின் பிறப்பிடமான தாவெய் மலை அடையலாம். தாவெய் மலை, அரசு நிலை வனப் பூங்காவாகும். இப்பூங்காவில் ஈராயிரத்துக்கும் அதிகமான வகை மரங்களும் 50க்கும் மேற்பட்ட வகை விலங்குகளும் உள்ளன. இவ்விடத்தில் வெப்ப நிலை ஆண்டுக்கு சராசரியாக 12 டிகிரி செல்சியஸ் கூட இல்லை. இடை வெப்ப மண்டலப் பகுதியில் அமைந்துள்ள ஹுனான் மாநிலத்தில் இது காண்பது அரிது. தாவெய் மலையில் காட்சித் தலங்கள் பல உள்ளன. மலைகளுக்கிடையிலான ஏரிகளும் மலையிலிருந்து பொங்கி எழும் நீருற்றுக்களும் அதிக அளவில் உள்ளன. அகன்றதாகக் காணப்படும் சிலின் மலை அருவி மேலே இருந்து கீழே நோக்கிப் பாய்கின்றது. வசந்த காலத்தில், மலையில் எங்கெங்கும் azalea மலர்கள் மலரும். அன்றி, மலையில் தொட்டால் சுருங்கி என்பது போன்ற ஒரு வகை மரம் வளர்கின்றது. கையால் இதை லேசாகத் தொட்டால் போதும். அது பயபட்டு நடுங்கி சுருங்கிவிடும். வழிகாட்டி யுவெ ஹுவெய்ச்சுவான் கூறியதாவது,
இதுவரை, லியுயாங் வாணவெடியின் வரலாறு 1400 ஆண்டு பழமையானது. அதன் காட்சியகத்தில் முக்கியமாக, வாணவெடியின் துவக்கத்திலிருந்து இதுவரையான தயாரிப்புத் தொழில் நுட்பங்கள் சேகரித்துவைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, தற்போது பல தொழிற்சாலிகளில் கையால் வாணவெடி தயாரிப்பது குறைவு. இதற்குப் பதிலாக இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், நினைவுக்காக, நாங்கள் அதைச் சேகரித்திருக்கின்றோம் என்றார் அவர். 60 அல்லது 70 வயது மூத்த கலைச் சிற்பிகள் சிலர், வாணவெடி வகையில் மிக எளிய முறையில் தயாரிக்க கூடிய பட்டாசு உற்பத்தியை எங்களிடம் செய்துகாட்டினர். இந்த மூத்த கலைத்தொழிலாளர் காகிதத்தைக் கத்தரித்து, அதை வட்டமாகச் சுருக்கிவிட்டு, உள்ளே வெடி மருந்து போட்டு, பசை தடவி, கம்பி போடுவது முதலிய 10க்கும் அதிகமான செய்முறைக்குப் பின்னர் தான் இந்தச் சின்ன பட்டாசு உருவாயிற்று. முன்பு, இரவு ஆகாயத்திலான வாணவெடியின் அழகை மட்டும் கண்டுகளித்திருந்தோம். அதன் தயாரிப்புப் பணியும் கலைத்தொழிலாளரின் அயரா உழைப்பும் எப்படிப்பட்டது என்பதை இம்முறை தான் நேரில் கண்டோம். தற்போது, அனைத்து வாணவெடி உற்பத்தி ஆலைகளிலும் இலக்க முறை தொழில் நுட்பம் உள்ளிட்ட உயர் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதன் செய்முறை எளிது என்று வழிகாட்டி கூறினார்.
1 2 3
|