எமது செய்திமுகவர் அங்கு சென்ற ஒரு நாளின் இரவில் வாணவெடி விழா நடைபெற்றது. ஏராளமான வாணவெடிகள் ஆகாயத்தில் விடப்பட்டன. அவற்றில் சில, நட்சத்திரங்கள் போல மினுமினுகின்றன. சில, அருவி போல பாய்ந்துகொட்டுகின்றன. வேறு சில, plum மலர் போல இதழ்களை விரிக்கின்றன. தோகை விரிவாக்கும் மயில் போல் காட்சியளிக்கின்றன. அதிக அளவிலான பூ மழை ஆகாயத்திலிருந்து விழும் போது, நாம் சுவர்க்கத்தில் இருப்பது போல தோன்றுகின்றது. இவற்றில் 2 வாணவெடிகள் குறிப்பிடத் தக்கவை. ஒன்று, மிகப் பெரிய அழகான தாமரை வடிவ வாணவெடி. அது, ஆகாயத்தில் சுமார் 2 நிமிடம் தங்கிவிட்ட பின் மறையும். மற்றது, தாவெய் மலைக் காட்சிப் படம். எண்ணற்ற வாணவெடிகளைக் கொண்ட இப்படத்தில், மலைகளும் மரங்களும் நடமாடும் காட்சியும் நீரோட்டம் ஓடும் காட்சியும் காணப்படுகின்றன. இவை எவ்வாறு தயாரிக்கப்பட்டன என்று தெரியாது. கண்ணிமைக்கும் நேரத்தில் அவை மறைந்துவிட்டாலும் பல நாட்களுக்குப் பின்னரும் என் நினைவில் உள்ளது என்று எமது செய்திமுகவர் நினைவு கூர்ந்தார்.
1 2 3
|