
திபெத் இன மக்கள்
சுற்றுலா தவிர, அரசியல் கலந்தாய்வு மாநாட்டு கூட்டத்தில் கலந்துகொள்வதும், நாடு திரும்பிய பின், அவரது வாழ்க்கையில் ஒரு முக்கிய அம்சமாகும். 1998ம் ஆண்டில், அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை பெரிதெனக் கருதி, தம் முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் ஆக்கப்பூர்வமாக எழுதி தந்துள்ளார்.
திபெத் சமூகத்தில் பொருளாதாரம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. பொது மக்களின் வாழ்க்கை இடைவிடாமல் மேம்பட்டு வருகிறது. சமூக சூழலும் நாளுக்கு நாள் சீராகி வருகிறது. இதனால், மென்மேலும் அதிகமான, வெளிநாட்டில் வாழ்கின்ற திபெத் இனத்தவர் தம் ஊருக்குத் திரும்ப விரும்புகின்றனர். லாசா நகரில், 2004ம் ஆண்டில் மட்டும், 400 திபெத் இனத்தவர் வெளிநாட்டிலிருந்து திபெத் வந்து உற்றார் உறவினரைப் பார்த்தனர். சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். வணிகத்தில் ஈடுபட்டனர். இந்தியா, நேபாளம், ஸ்விட்சர்லாந்து, அமெரிக்கா, கனாடா, பிரிட்டன் முதலிய நாடுகளை அவர்கள் சேர்ந்தவர்கள். லாசா நகராட்சி ஐக்கிய முன்னணி பணித்துறையின் தலைவர் நிமாவான்துவ் குறிப்பிட்டதாவது:

திபெத் இன மகளிர்
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய திபெத் இனத்தவரின் வாழ்க்கையில், திபெத்தின் பல்வேறு நிலை வாரியங்கள் மிகுதியும் கவனம் செலுத்துகிறன. லாசா திரும்பிய அவர்கள் சந்தித்துள்ள இன்னல்களைத் தீர்க்க நாங்கள் உதவிடுகின்றோம். குடியேறியவர்களுக்கு உதவியாக புத்தாண்டு நாட்களிலும் விடுமுறை நாட்களிலும், அல்லது திருமண நாளிலும் மரண நாளிலும் அரசின் பணியாளர்கள் அலுவல் புரிகின்றனர். அந்நாட்களில் நாங்கள் வீடுவீடாகச் சென்று ஆறுதல் தெரிவித்து, கட்சி மற்றும் அரசின் கவனத்தை தெரிவிக்கின்றோம். அதே வேளையில், அவர்களின் அரசியல் உரிமைகளில் கவனம் செலுத்தியுள்ளோம். தற்போது, நாடு திரும்பிய 9 திபெத் இனத்தவர்கள் பல்வேறு நிலை அரசியல் கலந்தாய்வு மாநாட்டு வாரியங்களிலும் பிறவற்றிலும் கடமை புரிகின்றனர் என்றார் அவர்.
நாள்தோறும் அதிகாலையிலேயே இசிபான்தான் வெளியே போய் சுற்றுலா செல்கின்றார். சுமார் பத்து மணி நேரத்தில் எங்கெங்கும் போய் பார்ப்பார். தம் கண்கணால் திபெத்திய லாசா நகரில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை எல்லாம் தம் மனதில் ஆழப்பதிந்து கொள்வார். தாம் திரும்பிய பத்து ஆண்டுகளில் திபெத்தில் எந்நேரத்திலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்றார் அவர். 1 2 3
|