சீனாவின் சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் வசிக்கும் கர்கஸ் இன மக்கள், முன்பு, புல்லும் நீரும் உள்ள இடத்தை தேடி நாடோடி வாழ்க்கை நடத்தினர். கடந்த சில ஆண்டுகளாக, கல்வி வாய்ப்புக்கள் அதிகமாகியிருப்பதால், அவர்களில் பலர் இந்த மரபுவழி நாடோடி வாழ்க்கை முறையைக் கைவிட்டு, வழக்கறிஞர், வணிகர் மற்றும் அறிஞர்களாக மாறினர். இப்போது, கர்கஸ் இன பேராசிரியர் மக்லேக் பற்றி தங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.
நரைத்த தலைமயிர் நிறைய உள்ள பேராசிரியர் மக்லேக் 50 வயத்துக்குட்பட்டவர் என்பதை முதல் சந்திப்பில் எங்களால் நம்ப முடியவில்லை. மலர்ச்சியான முகத்தில் எங்களைச் சந்திக்கும் இம்முதியோரின் அலுவலகத்தில் ஒரு கண்ணி ஒரு அலுவலக மேசை, ஒரு தொலைபேசி ஆகியவை தவிர, அலுமாரிகளில் நிறைய நூல்கள் காணப்படுகின்றன. எளிய வாழ்க்கை நடத்த விரும்புவதாக பேராசிரியர் மக்லேக் சிரிப்புடன் கூறினார்.
வாழ்க்கையைப் பொறுத்து, ஒருவரின் அடிப்படை வாழ்க்கை வசதிக்கு உத்தரவா தம் செய்வது, போதுமானது. மனிதர் என்றால், தாம் செய்ய விரும்புபவற்றை செய்ய வேண்டும், தலைமைறையினருக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய விஷயங்களைச் செய்திட வேண்டும் என அவர் கூறினார்.
1 2 3
|