• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-20 10:16:36    
பேருந்தில் சுற்றுலா

cri

தற்போது வெளிநாட்டுப் பயணிகள் சீனாவில் பேருந்துப் பயணம் மேற்கொள்ள விரும்புகின்றனர். தற்போது பெய்ச்சிங்-ஷாங்காய். மற்றும் பெய்ச்சிங்-சிஆன் என்ற 2 வழித்தடங்கள் பயணிகளுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளன. இது பற்றி சீன சர்வதேச சுற்றுலாப் பணியகத்தின் அதிகாரி கொவன்பிங் கூறியதாவது,
பேருந்தில் பயணம் செய்வது என்பது, அது செல்லும் வழியில் உள்ள சுற்றுலா மேற்கொள்வதாகும். கடந்த சில ஆண்டுகளில் எங்கள் நாட்டின் உயர் வேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணி மும்முரமாக நடைபெற்றிருப்பதால் நெடுஞ்சாலை தொடர் அமைப்பு உருவாயிற்று. பயணிகள், பேருந்து மூலம் சுற்றுலா மேற்கொள்வதற்கு இது உறு துணை புரிகின்றது. பேருந்து மூலம் பெய்ச்சிங்-ஷாங்காய் நெடுஞ்சாலையில் சென்றால் வழியில், தியென்ஜின், தைய்சான், சியுஹு, சியுசோ, சூசோ ஆகிய நகரங்களைப் பயணிகள் பார்வையிட்டு, இறுதியில் ஷாங்காய் சென்றடைவார்கள். இதற்கு மொத்தம் 12 நாட்கள் தேவைப்படும். பெய்ச்சிங்கிலிருந்து சிஆன் செல்லும் வழியில், பௌதின், ஹென்தென், அன்யாங், சென்சோ, லோயாங், சான்மன்சியா ஆகியவற்றுக்கு ஊடாகச் சென்று, இறுதியில் சிஆன் சென்றடைவார்கள். இதற்கு 9 நாட்கள் பிடிக்கும் என்றார் அவர்.


தற்போது, சீனாவின் உயர் வேக நெடுஞ்சாலையோர நகரங்களிலும், காட்சித் தலங்களிலும் பயணிகளை வரவேற்கும் வசதிகள் அதிகரித்துள்ளன. தரமான பேருந்தில் ஏறி, வழி நெடுகிலும் நகரங்களையும் காட்சித் தலங்களையும் பார்வையிடுவது மிகவும் வசதியானது. மகிழ்ச்சி தரக் கூடியது. பேருந்து மூலம் சுற்றுலா மேற்கொள்ள விரும்பும் பயணிகள் நாள்தோறும் சுமார் 4 மணி நேரம் பேருந்தில் உட்கார்ந்திருக்க வேண்டும். ஒரு நகரை விட்டு, மற்றொரு நகரம் சென்றடைந்த பின்னர், பயணிகள் இந்நகரிலே ஓரிரு நாட்கள் தங்கியிருந்து சுற்றுலா மேற்கொள்வதற்குச் சுற்றுலாப் பணியகம் ஏற்பாடு செய்கின்றது என்று அவர் சொன்னார்.
சீன சர்வதேச சுற்றுலாப் பணியகத்தின் வழிகாட்டி கௌவிவி எங்கள் செய்தியாளரிடம் பேசுகையில், பேருந்தில் சுற்றுலா என்னும் பயண முறையை வெளிநாட்டுப் பயணிகள் மிகவும் வரவேற்கின்றனர். ஏனென்றால், பயணிகள் நெடுஞ்சாலை நெடுகிலும் அமைந்துள்ள காட்சித் தலங்களை நன்கு பார்வையிடலாம். விமான மூலம் பயணம் மேற்கொள்வோருக்கு இத்தகைய அனுபவம் கிடையாது. குறிப்பாக, பெய்ச்சிங்-ஷாங்காய், பெய்ச்சிங்-சிஆன் ஆகிய இரு பாதைகளிலும் சுற்றுலாப் பயணம் செய்தால் வழியில் பார்க்கக் கூடிய இடங்கள் நிறைய உள்ளன என்றார்.
1  2  3