• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-30 17:31:54    
உலகின் உயரமான மனிதர் மங்கோலிய இன ஆயர் பாவ் சி செங்

cri

புல்வெளியில் அமைதியான வாழ்க்கை நடத்தலாம் என்று பாவ் சி செங் நினைத்தார். ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பர் திங்களில், பாவ் சி செங் மிகவும் உயரமானவர் என்பதை கேட்டு, வணிகர் ஒருவர் அடிக்கடி அவரது வீட்டுக்குப் போய், விருந்தினர்களை ஈர்க்க தமது உணவு விடுதியில் பணிபுரியுமாறு கேட்டுக் கொண்டார். துவக்கத்தில், குடும்பத்தினர்கள் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இருப்பினும், மீண்டும் மீண்டும் யோசித்த பின்னர், வெளியூருக்குப் போய் பார்க்கலாம் என்று பாவ் சி செங் முடிவு செய்தார்.

உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் கிழக்கிலுள்ள Chi Feng நகரில் அமைந்துள்ள இவ்வுணவு விடுதியில் அவ்வளவு அதிகமான விருந்தினர்கள் வருவதில்லை. இருப்பினும், பாவ் சி செங் இவ்விடுதியில் பணிபுரியத் துவங்கிய சில நாட்களுக்குள் நிலைமை மாறி விட்டது. உயரமானவரை நேரில் காண, நீ முந்தி, நான் முந்தி என்று மக்கள் வருகை தந்துள்ளனர். அப்போதைய நிலைமை நினைவுகூர்ந்த போது, பாவ் சி செங் மகிழ்ச்சியடைந்தார்.

அவர் கூறியதாவது:

"உணவு விடுதி கட்டிடத்தின் மாடியிலோ, அதன் கீழ்பகுதியிலோ, நடைப்பாதையிலோ காலையில் அரைமணி முதல் ஒரு மணி நேரம் வரை, நான் உலவ வேண்டும். மாலையிலும் ஒருமணி நேரம் அப்படியே. என்னைச் சுற்றிப் பார்ப்பவர்களின் கூட்டம் அதிகமாகி வருகின்றது. இவ்வாறு உணவு விடுதிக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகின்றது. நாள்தோறும் நிறைய விருந்தினர்கள் உணவு உண்ண வருகின்றனர்."

முன்பு மெளனமான பாவ் சி செங், விறுவிறுப்பான நகரத்துக்குள் வந்த பிறகு, தொலைவிலும் அருகிலும் பிரபலமானார். தற்போது அவர், உற்சாகமிக்கவர். சீன மொழி அதாவது, ஹான் இன மொழியை நன்றாக பேச முடியவில்லை என்ற போதிலும், பேச மிகவும் விரும்புகின்றார்.

செய்தித்துறையினரின் உதவியுடன், கடந்த ஆண்டின் இறுதியில், உலகில் இயல்பாக வளர்ந்துள்ள முதலாவது உயரமானவர் என்ற உலக சாதனைக்காக பாவ் சிங் செங் விண்ணப்பிக்க முடிவு மேற்கொண்டார். இவ்வாண்டின் ஜூலை திங்கள் அவரது உடல் உயர்வு மற்றும் உடல் நிலைமை சோதித்துப்பார்க்கப்பட்ட பின் Guinness உலக சாதனை தலைமையகம் அவரது விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளித்து, அவருக்கு சான்று இதழை வழங்கியது.

தற்போதைய பாவ் சி செங், அடிக்கடி, அளவுக்குமீறிய பெரிய நீல நிற மங்கோலிய சட்டை அணிந்து, வெவ்வேறான இடங்களுக்குப் போய் பொது நலனுக்கான பிரச்சார நடவடிக்கைகளில் கலந்து கொள்கின்றார். இது மட்டுமின்றி, பண்பாட்டுப் பரிமாற்ற நடவடிக்கைகளில் பங்கெடுக்கும் பொருட்டு, அவர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.


1  2  3