ராஜா.....சரி. கேளுங்கள். பப்பாளி உணவுக்கு தேவைப்படும் பொருட்களில் பப்பாளி, ஒரு முட்டையின் மஞ்சள் கரு, ஒரு கரண்டி தேன், பால் 200 மில்லிலிட்டர், அரை ரேமுன் ஆகியவை இருக்க வேண்டும்.
கலை......தேவைப்படும் பொருட்கள் சொன்னீர்கள். தயாரிப்பு முறை அறிமுகப்படுதுங்கள்.
ராஜா........முதலில் பப்பாளியை தோல் நீக்கி துண்டு துண்டாக நறுக்கி, பால் முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றுடன் சேர்ந்து பழச்சாறாக கருவியில் அரைக்க வேண்டும். பின் ரேமுன் சாற்றையும் தேனையும் சேர்க்க வேண்டும். இப்படி செய்தால் பழச் சாறு மேலும் நன்றாக பப்பாளி உணவில் கலக்கும். அதில் கொஞ்சம் விஸ்கி சேர்த்தால் சுமை மேலும் அருமையாகும். இல்லையென்றாலும் சுவையாகத் தான் இருக்கும்.
கலை......எனக்கு தெரியும். தமிழர்களுக்கு விஸ்கி பிடிக்காது. இது பற்றி நீங்கள் குறிப்பிட தேவையில்லை. சரியா?
ராஜா........விஸ்கி உள்ளே சேர்ப்பது மேலை நாட்டு மக்களின் பழக்கம். உங்களுக்கு பிடிக்காவிட்டால் இதில் சேர்க்க தேவையில்லை. அவ்வளவு தான். கவலைப்படாதீர்கள்.
கலை......சரி. நேயர்களே இன்றைக்கு பப்பாளியும் பாலும் கலந்த ஐஸ்கீரீம் பற்றியும் பப்பாளி உணவு பற்றியும் சொன்னோம். அக்கறை இருந்தால் வீட்டில் தயாரித்து சுவை பாருங்கள்.
ராஜா......அடுத்த முறை பூசணிக்காய் பஜ்ஜி பற்றிக் கூறுவோம். பூசணிக்காய் அரை கிலோ, முட்டை மஞ்சள் கரு அல்லது உப்பான வாத்து முட்டை மஞ்சள் கரு தாயார இருக்க வேண்டும். பூச்சனிப் பச்சி பற்றி கூறுவோம்.
கலை.....வணக்கம் நேயர்களே. இத்துடன் சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி நிறைவுறுகின்றது. 1 2 3
|