விவேகத்தோடு விளையாடுவது என்று பார்த்தால் குழந்தை விளையாடும் போது அதனுடைய கைகள் பல நுட்பமான செயல்களை செய்ய வேண்டும். அப்போது கைகளிலுள்ள சிறிய தசைகளுக்கு பயிற்சிக்கிடைக்கிறது. இதன் மூலம் மூளையின் வளர்ச்சி தூண்டப்படுகின்றது. இயல்பான அதிர்ச்சியும், ஆராய்ச்சியும் குழந்தை விளையாடும் சுய முயற்சியையும் கற்பனையையும் வளர்க்கலாம். மனோவியல் படி குழந்தைகளின் வாழ்க்கை பற்றிய மனப்பான்மை ஆரம்பத்திலேயே உருவாகிவிடுகின்றது. குழந்தைப் பருவத்திலே விளையாட தெரியாவிட்டால் அது மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து வாழ முடியாது. தன்னம்பிக்கை குறையும். இதன் காரணமாக மனவியல் பிரச்சினை நிகழக் கூடும் என்று டாக்டர் துங் கூறினார்.

குழந்தைக்கு ஏன் விளையாடத் தெரியவில்லை?
விளையாடுவது என்பது குழந்தையின் இயல்பான திறமை. இப்போது பல பெற்றோர்கள் குழந்தைக்கு நடத்த தெரிந்ததுமே அவசரப்பட்டு பல்வகை வகுப்புகளில் சேர்த்து விடுகின்றனர். இதில் முக்கியமான ஒரு விஷயத்தை இந்த பெற்றோர்கள் மறந்துவிடுகின்றனர். அதாவது குழந்தைகளை விளையாடுவதற்கு கற்கும்படி தூண்டுவதில்லை.
உண்மையில் விளையாடுவது என்பது ஒரு சிறப்பான வளர்ச்சியாகும். குழந்தைப் பருவம் அறிவை கிரகித்துக் கொள்ளும் பருவமாகும். விளையாடும் போக்கில் திசை உணர்வு, இடைவெளி கற்றுக் கொள்வது, மற்றனுடன் தொடர்பை மேற்கொள்வது, மற்றவருடன் பழகுவது பிரச்சினைகளை சமாளிப்பது ஆகியவற்றை குழந்தைகள் கற்றுக் கொள்கின்றன. விளையாட தெரியாவிட்டால் சுமையற்ற இத்தகைய படிப்பு வாய்ப்பை குழந்தை இழந்து விடும்.
1 2 3
|