• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-24 14:46:39    
ஐரோப்பாவில் மங்கோலிய ஆயர்களின் பயணம்

cri

மாடு மற்றும் ஆடு வளர்ப்புப் பற்றி மங்கோலிய இன ஆயர்களுக்கு நன்கு தெரியும். ஏனெனில், பண்டைக்காலம் தொட்டு, அவர்கள் விசாலமான புல்வெளியில் ஆடுமாடுகளை மேய்க்கின்றனர். ஆனால், தற்போது, இன்னல்களைச் சந்தித்துள்ளனர். பாரம்பரிய கால்நடை வளர்ப்புத் தொழிலின் படி, ஆடுமாடுகள் அங்குமிங்குமாக மேயவிடப்படுகின்றன. அவற்றின் அதிகரிப்பு வேகம், புல்தரையின் அதிகரிப்பு வேகத்தை விட விரைவானது. புல்வெளியில் தாவரங்கள் கடும் பற்றாக்குறை நிலையில் உள்ளன. அன்றி, சிதறி மேயும் ஆடுமாடுகள், புல்வெளியின் பசுமைப்பரப்பை கடுமையாகச் சீர்குலைக்கின்றன. எடுத்துக்காட்டாக, வலுவான பற்களால், கடிக்கும் வெள்ளாடு மேயும் இடமெங்கும் புல் வளர்வதில்லை. அதே வேளையில், கால்நடைகள் உணவு தேடும் போது ஏராளமாக தூரத்தைக் கடக்க வேண்டி ஏற்பட்டது. வழக்கமாக வயிறார சாப்பிட்டு விட்டு, நடந்து கொண்டே பசி ஏற்படும். கொழுப்படைந்த பின், மெல்லிசாகி விடுகின்றன.

இத்தகைய நிலைமையில், ஈராடுவின் ஊரான ஹெர்தோஸ் நகராட்சி அரசு, புதிய வளர்ப்பு முறை ஒன்றை முன்வைத்தது. அதாவது, ஆயர்கள், தமது மாடு ஆடுகளுக்கென, தொழுவங்களைக் கட்டி, அவற்றை வளர்க்க வேண்டும். அதே வேளையில், அவற்றுக்கு தேவைப்படும் புல்பொருட்களைப் போதிய அளவில் தயாரித்து தர வேண்டும்.

துவக்கத்தில் ஆயர்கள் இதை புரிந்து கொள்ளவில்லை. இவ்வாறு செய்தால், செலவு அதிகரிக்கும் என்று அவர்கள் நினைத்தனர். ஆனால், உண்மை அப்படி அல்ல. இரண்டு ஆடுகளை வைத்துள்ள, வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட சுயபராடு கூறியதாவது:

"முன்பு, ஒரு பெண் ஆடு ஒரு ஆண்டுக்கு ஒரு குட்டி மட்டும் போட்டது. இப்போது இரண்டு அல்லது மூன்று குட்டிகளை போடுகிறது. குளிர்காலத்தில் பிறந்த ஆட்டுக்குட்டிகளின் ஆயுள் அதிகரித்துள்ளது. அவை மிகவும் கொழுகொழுப்பாக உள்ளன" என்றார்.

தொழுவ வளர்ப்பு காரணமாக, ஹெர்தோஸ் நகரின் கால் நடை வளர்ப்புத்தொழில் விரைவாக வளர்ந்துள்ளது. நகரத்திலுள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான கால்நடை வளர்ப்பு குடும்பங்களில் ஒருகோடியே 40 லட்சம் கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. புல்தரை கட்டுமான அளவு அதிகரிக்கப்பட்டதினால், புல்வெளியின் பசுமை விரைவாக மீட்கப்பட்டுள்ளது.

1  2  3