ராஜா.....அந்த நேரத்தில் சீனாவில் பறவை காய்ச்சல் தொற்றிய முதலாவது மனிதர் கண்டுபிடிட்டார் என்ற செய்தியை சீன சுகாதார அமைச்சகம் அறிவித்தது. அந்த சூழ்நிலையில் நிறுவனம் என்ன முயற்சி மேற்கொண்டது?
கலை.......தகவலை கேள்விப்பட்ட பின், நிறுவனம் சோதனை வேகத்தை சரிபடுத்தி ஆட்களையும் பொருள் உதவியையும் அதிகரித்து மனித உடம்பில் சோதனை செய்யும் முயற்சியை விரைவுபடுத்தியது.
ராஜா.....நிறுவனம் எப்படி முயற்சி மேற்கொள்கின்றது?
கலை.......நிறுவனமும் பெய்சியில் உள்ள சீன-ஜபபானிய நட்பு மருத்துவ மனையும் நோயாளி சோதனை குழு ஒன்றை உருவாக்கி பறவை காய்ச்சல் தடுப்பூசி மருந்து போடுவதற்கான தொண்டர்களை திரட்டுவதாக சுற்றறிக்கை விடுத்தன.
ராஜா.....சுற்றறிக்கை வெளியிடப்பட்ட பின் நிலைமை எப்படி?
கலை......நீங்கள் கவலைபடுவதும் சீன-ஜபபானிய நட்பு மருத்துவ மனையின் மூச்சு துறை தலைவர் லின் சியான் தோ கவலைபடுவதும் ஒரேமாதிரி உள்ளது. அப்போது சீனாவில் மனிதருக்கு பறவை காய்ச்சல் கிருமி தொற்றிய நிலைமையில் யாரும் தொண்டராக முன்வந்து சோதனையில் சேர்வார்களா என்ற கவலை ஏற்பட்டது. இது பற்றி அவர் கூறியதாவது
ராஜா......சுற்றறிக்கை வெளியிடப்பட்டு இரண்டு நாட்கள் கழிந்ததும் தொண்டர்கள் தொலைபேசி மூலம் அவர்களின் விருப்பத்தை தெரிவித்தனர். அவர்களில் மருத்துவமனை ஊழியர்கள், பணியாளர்கள், நகரில் வேலை செய்கின்ற விவசாயிகள் ஆகியோர் அடஙாகுவர்.
அவர்கள் விண்ணப்பம் செய்வது மிக அற்புதமானது என்றார் அழர்.
கலை.....அவர்களின் உற்சாகமான பங்கினால் கோசின் என்னும் நிறுவனம் ஆராய்ந்து தயாரித்த தடுப்பூசி மருந்து முதலாவது தொதியாகிய அவர்களின் உடம்பில் போடப்பட்டது. கடந்த டிசெம்பர் திங்கள் 22ம் நாள் மனிதருக்கு பயன்படுத்தப்படும் பறவை காய்ச்சல் தடுப்பூசி மருந்து தொண்டர்களின் உடம்பில் போடப்பட்டது.
ராஜா....இவர்களில் 20 வயதான தொண்டர் சான் செவிலியாகப் பணி புரிகின்றார். அவர் ஓரளவு மருத்துவ அறிவு உடையவர். தடுப்பூசி மருந்து போடப்பட்ட பின் அவர் இன்னும் கவலைபட்டாராமே. அப்படியா?
கலை.....ஆமாம். அவர் கூறியதாவது
தடுப்பூசி மருந்து போடப்பட்ட பின் எனக்கு பயம் வந்தது. காய்ச்சல் வருமோ என்று நான் மிகவும் கவலைப்பட்டேன். உண்மையில் எனக்கு காய்ச்சல் போன்ற எதிரொலிப்பு எதுவும் வரவில்லை என்றார் அவர்.
ராஜா......இந்த முதலாவது அணி தொண்டர்களான ஆறுபேரின் உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவர்கள் கூரினார்கள்.
1 2 3
|