கலை.....ஆமாம். அவர்கள் தடுப்பூசி மருந்து போடப்பட்ட பிறகு 56 நாட்களுக்கு அவர்கள் கண்காணிப்புக் காலத்தில் வைக்கப்பட்டனர். அவர்களின் உடம்பில் அப்போது நோய் எதிர்ப்பு ஆற்றல் உருவாகும். அவர்களின் உடம்பிலிருந்து பறவை காய்ச்சலை எதிர்த்து நிற்கும் கிருமி வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட பின் இரண்டாவது, மூன்றாவது நான்காவது தொண்டர்கள் இந்த ஆராய்ச்சியில் பங்கெடுத்துள்ளனர். சோதனை அளவு விரிவாக்கப்பட்டது. இதுவரை 120க்கும் அதிகமானோர் முதலாவது சோதனை ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு நோய் கிருமி போடப்பட்ட பின் யாருக்கும் இயல்புக்கு மாறான உணர்வு ஏற்படவில்லை.
ராஜா.....இந்த சோதனை எத்தனை நாட்கள் நடைபெறும்?
கலை......முதலாவது சோதனையின் விளைவு மே, ஜுன் திங்களில் தெரியவரும். பின் இரண்டாது முன்றாவது காலகட்ட சோதனைகளை செய்ய வேண்டும். மனிதருக்கென பயன்படுத்தப்படும் பறவை காய்ச்சல் தடுப்பூசி மருந்தை ஆராய்ந்து தயாரிப்பதில் சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் பறவை காய்ச்சல் தடுப்பூசி மருந்து வளர்ப்புக்குப் பொறுப்பாளர் சியா ச்சின் கோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது
ராஜா......தற்போது நோய் கிருமி பயனுள்ள முறையில் பாதுகாக்கப்படுகின்றது. மனிதரின் உடம்பில் சோதனை செய்வதன் மூலம் உறுதிபடுத்தப்பட வேண்டும். தீவிரமாக ஆராய வேண்டும் ஆகவே நோய்க் கிருமிகளைப் பெருக்குவதில் பயன் உண்டு. தொழில் நுட்பரீதியில் உத்தரவாதம் அளிக்கப்படும் என்றார் அவர்.
கலை......மனிதருக்கென பயன்படுத்தப்படும் பறவை காய்ச்சல் தடுப்பூசி மருந்து விற்பனைக்கு விடுவதற்கு முன் ஆகும். ஆனாலும் சீனா இதில் உற்சாகத்துடன் ஈடுபடுகின்றது. தற்போது தடுப்பூசி மருந்து தயாரிப்பு முறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சோதனையில் முழு வெற்றி பெற்ற பின் அல்லது அவசர சூழ்நிலையில் அரசின் தொடர்புடைய வாரியங்கள் அனுமதி வழங்கிய பின் தாமதமின்றி இயங்க முடியும் என்று அதிகாரி சியா ச்சின் கோ தெரிவித்துள்ளார்.
ரைஜா......நேயர்கள் இதுவரை மனிதருக்கென பறவை காய்ச்சல் தடுப்பூசி மருந்து ஆராய்ந்து தயாரிப்பில் ஈடுபடும் சீனா என்பது பற்றி கேட்டீர்கள். இத்துடன் நலவாவ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி நிறைவடைகின்றது. 1 2 3
|