சூபோ என்பவர் மங்கோலியாவிலிருந்து சீனாவுக்கு வந்த ஒரு மாணவர். தற்போது அவர் சீன மக்கள் பல்கலைக்கழகத்தில் தூதாண்மை இயல் முதுகலை பட்டத்துக்காக கல்வி பயில்கிறார். அவர் சீனாவுக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 5 ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பலரை அவர் சந்தித்துள்ளார். தொடக்கத்தில் அவர்களின் சிறப்பு தகுநிலையை அவர் கவனிக்கவில்லை. அவர்கள் மற்றவர்களை விட பக்குவம் வாய்ந்தவர்கள் என்பதை மட்டும் அவர் உணர்ந்தார். பின்னர் அவர்களுடன் தொடர்பு கொண்ட போது, பக்குவம் வாய்ந்த இந்த சீன நண்பர்கள் சீனாவை ஆட்சி புரியும் கட்சியின் உறுப்பினர்கள் என்பதை அவர் படிப்படியாக புரிந்து கொண்டார். பெரிய நாட்டை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ற முறையில் அவர்கள் சாதாரண மக்களை விட பெருமையுடன் இருப்பார்கள் என்று நான் முன்பு நினைத்தேன். ஆனால் அவர்கள் அப்படி இல்லை. மற்றவர்களுக்கு இன்னல் ஏற்படும் போதெல்லாம் அவர்கள் உதவிக்கரம் நீட்டுகிறார்கள் என்று சூபோ கூறினார்.
கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நண்பர்களுடன் மேலும் தொடர்பு கொள்வதில், மற்றவர்களிடம் இல்லாத தனிச்சிறப்புகளை அவர்கள் கொண்டிருக்கின்றனர் என்பதை சூபோ உணர்ந்துள்ளார். சீனாவில் இருந்த 5 ஆண்டுகளில் இந்த நண்பர்களுடன் பழகியது குறித்து, அவர் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். அவர் கூறியதாவது—
"சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மற்றவர்களுடன் நேர்மையாக பழகுவது மட்டுமல்ல, பிரச்சினைகளைச் சமாளிக்கும் போதெல்லாம் நியாயமாக செயல்படுகின்றனர். பெரிய நாட்டின் பெரிய கட்சியைச் சேர்ந்தவர் என்ற முறையில் இப்படிப்பட்ட நிலைமை சிறப்பாக உள்ளது" என்றார் அவர்.
சூபோ உள்ளிட்ட வெளிநாட்டு நண்பர்கள் போன்று, வெளிநாட்டவர்கள் பலர் வேலை செய்து, கல்வி பயின்று, வாழ்க்கை நடத்தும் போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டு, ஆழமான முறைகளில் அவர்களை அறிந்து கொண்டுள்ளனர். வெவ்வேறு முறையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்ட போதிலும், ஒரே மாதிரியான தோற்றம் அவர்களின் மனதில் பதிந்திருக்கிறது. அதாவது, நம்பிக்கை மிக்க ஆக்கப்பூர்வமான சாதாரண கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களால், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வலுப்பட்டு, உயிர்த்துடிப்பு பெற முடியும். 1 2 3
|