மணமகன் தலையில் உஸ்பெக் தொப்பியும் உடலில் தேசிய இன ஆடையும் அணிந்து, மகிழ்ச்சியில் மலர்ந்த முகத்துடன் செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்ததாவது:
"இப்போது வாழ்க்கை நிலைச் சீராக இருக்கின்றது. மணமகள் கோரியவாறு அனைத்தையும் வாங்கித் தந்துள்ளேன். தங்க மோதிரம், தங்கக் காதணி போன்றவற்றை வாங்கியுள்ளேன். 7 கார்கள் உட்பட்ட மணமகள் வரவேற்பு குழுவும் வரவழைக்கப்பட்டது. தற்போதைய திருமண விழாவுக்கு கிட்டத்தட்ட 20 ஆயிரம் யுவான் செலவிடப்பட்டது. எங்கள் கிராமத்தில் இது அதிகமில்லை" என்றார்.
மணமகள் வீட்டில் திருமண விழா முடிவடைந்த பின், இந்த வரவேற்பு கார் குழு, மணமகளை, மணமகனின் வீட்டிற்கு அனுப்பும். அங்கு, தயாராயுள்ள அன்பளிப்புப் பொருட்கள், மணமகளின் குடும்பத்தினர்களுக்கு காண்பிக்கப்படும். இம்முறை, அன்பளிப்புப் பொருட்கள் எல்லாம் தரமானவை. LCD தொலைக்காட்சியும் VCDயும் மோட்டார் சைக்கிளும் இருக்கின்றன. அவர்களுக்குத் தேவைப்படும் வாழ்க்கைப் பயன்பாட்டுப் பொருள் அனைத்தும், உள்ளூரில் தலைசிறந்தவை. தமது பொருளாதார ஆற்றலை போதிய அளவில் காண்பிப்பதன் மூலம், மணமகளின் குடும்பத்தினர்கள் கவலைப்படாமலிருக்கச் செய்திட வேண்டும் என்றார், மணமகன்.
சற்றுப்பின்னர், மணமகன், அறையில் சென்று, மணமகளின் பக்கத்தில் அமர்ந்தார். அடுத்து, மணமகளின் தாய், ஒரு பொம்மை போன்ற சிசு ஒன்றை தம் ஆரவணைப்பில் வைத்துக் கொண்டு, மணமகளுக்கு கொடுத்தார். இது என்ன பொருள் என்று செய்தியாளர் கேட்டதற்கு, எதிர்காலத்தில் மணமகள் பல பிள்ளைகள் பெறுவதற்காக வழிபாடு செய்வதென இது பொருள்படுவதாக ஒரு பெண் விருந்தினர் பதிலளித்தார்.
1 2 3
|