• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-26 11:39:13    
மனிதர்களின் எண்ணங்களை அறியும் மூளை வரிமம்

cri

நீங்கள் நினைப்பதை என்னால் அறிந்துகொள்ள முடியும் என்று உங்களை பார்த்து யாராவது சொன்னால் முதலில் நீங்கள் அட ஏதோ வேடிக்கை வித்தை விளையாட்டு என்று நினைப்பீர்கள். இல்லையென்றால், அட இதென்ன வம்பா போச்சு, ஏடாகூடமாக எதையாச்சும் அந்த நபர் சொல்லித் தொலைக்க, நமக்கு எதுக்கு தொல்லை என்று நினைத்து, அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீங்க வந்த வழிய பார்த்து போங்க என்று அவரை அனுப்பி வைப்பீர்கள். பொதுவாக இதைத்தான் நம்மில் பலர் செய்வோம். ஆனால் இப்படி ஒருவர் நினைப்பதை மற்றவர் சொல்லிவிட முடியும் என்பதில் நமக்கும் ஒரு சந்தேகம் கலந்த நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. சந்தேகம் கலந்த நம்பிக்கை, இரண்டு முரண்பட்ட வார்த்தைகள் ஒன்றாய் பொருந்திய சொற்றொடர். இறை சக்தி இருக்கிறதா இல்லையா என்பதில் தொடங்கி, மனிதர்களிடையே பல விடயங்களில் இப்படித்தான் சந்தேகம் கலந்த நம்பிக்கை இருக்கிறது. இக்கரையிலும் இல்லாமல் அக்கரையிலும் இல்லாமல் எக்கரையும் எமக்கு அக்கறையில்லை என்பதாக இருப்போரும், காற்று வீசும் பக்கமாக சாய்கின்றதாக இருப்போரும்தான் உலகில் அதிகம். தத்துவம் பேச இப்போது நேரமில்லை எனவே நீங்கள் நினைப்பதை ஒருவரால் சொல்ல முடியுமா என்ற பிரச்சனைக்கு வருவோம்.

 
நினைப்பதை சொல்வது எனும்போது...நீங்கள் ஒரு எண்ணை நினைக்க அதை இரண்டால் பெருக்கி, உடன் 50 சேர்த்து என்ற ரீதியிலான கணக்கு வித்தை முதற்கொண்டு பையா...ஐயா...கருப்புச் சட்டை போட்டிருப்பவர் சட்டைப்பையில் என்ன இருக்கு...எலுமிச்சம் பழமிருக்கு என்பதாக அமையும் மோடி மஸ்தான் வித்தை வரை நமக்கு நினைவுக்கு வரும். அதெல்லாம் வேடிக்கையான வித்தைகள். விவகாரமான வித்தையைத்தான் இன்றைக்கு நாம் அறிய இருக்கிறோம். நீங்கள் அடுத்த வாரம் உங்கள் மனைவிக்குத் தெரியாமல் நண்பர்களோடு ஒரு மகிழ் உலாவுக்கு திட்டம் போடுகிறீர்கள், அந்தத் திட்டம் பற்றி நீங்கள் வாய் திறந்து உங்கள் நண்பர்களிடம் தெரிவிப்பதற்கு முன் உங்கள் மனைவி, என்ன ராசா, என்ன சங்கதி என்று விளக்கமாக உங்கள் எண்ணங்களை புட்டு புட்டு வைத்தால் எப்படியிருக்கும் ஏய்யா எங்க நிம்மதியை கெடுக்கத்தான் இந்த நிகழ்ச்சியோ என்ற குரல் எங்கிருந்தோ கேட்கிறது.

1 2 3