• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Thursday    Apr 10th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-04 16:56:01    
மாத்திரையோ மாத்திரை

cri

42 வயது கிறிஸ்டா என்ற பெண்மணி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட ஒரு நபர். செவிலியராக பணிபுரியும் இவர், தனது வாழ்வில் நிகழ்ந்த அந்த கொடுமையான சம்பவத்தின் நினைவுகள் வாட்டியெடுக்க, மிகவும் வேதனையுற்றார். மருத்துவரை நாடியபோது, அவரது பதட்ட உணர்வை, மன அழுத்ததை லேசாக்கும் முகமாக மருத்துவர் சில ஆசுவாசப்படுத்தும், நிதானப்படுத்தும் மாத்திரைகளை பரிந்துரைத்தார். வேலியம் எனப்படும் இந்த மாத்திரை தூக்க மருந்து போன்றது. இந்த மருந்தை உட்கொண்டு கொஞ்சம் நிம்மதியடைந்த இந்த பெண்மணி, நாளடைவில் கொடுமையான நினைவுகள் வாட்டும்போதெல்லாம் மாத்திரையை பயன்படுத்தத் துவங்கினார். நாளடைவில் எண்ணிக்கை அதிகரிக்க, 4 ஆண்டுகள் கழித்து ஒரு நாள்சுய நினைவிழந்து, மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்காகத் தரப்பட்ட மருந்துக்கு அந்த பெண்மணி அடிமையானதால் ஏற்பட்டதே இந்த நிலை. இன்று அவர் அந்த மருந்துகளை எடுப்பதை நிறுத்தி, அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டவராக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார் என்பது ஆறுதலான செய்தி.

இவரை போல நம்மில் பலர் நிச்சயம் இருக்கக்கூடும். தலைவலியா ஆஸ்பிரின், காய்ச்சலா பாரசிட்டமால், உடல்வலியா ப்ரூஃபென் என்று நாமே நமக்கு மருத்துவராகி மருந்துகளை வாங்கி உட்கொள்வதும் உண்டு. மருத்துவர் ஒருமுறை எழுதிகொடுத்த மாத்திரையை மறுபடி மறுபடி பயன்படுத்துவதும் உண்டு. ஆனால் இதை நாம் யாரும் பெரிதுபடுத்துவதில்லை.

பொதுவாக நாம் நோயின் மூல காரணத்தை அறியாமல் மேலோட்டமான அதன் அறிகுறிகளையே பெரிதாக கருதுவதால் வரும் குழப்பமே இந்த அடிமைத்தனத்துக்கான அடிப்படையாகும்.

1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040