• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-04 16:56:01    
மாத்திரையோ மாத்திரை

cri

இதில் நாம் கவனிக்கவேண்டிய ஒரு அம்சம், இப்படி மருந்து மாத்திரைக்கு அடிமையானவர்களில் மூன்றில் இரண்டு பேர் பெண்கள் என்பதே. வீடு, குடும்பம், அலுவலகம், பணிச்சுமை என்று பல்வேறு நிர்பந்தங்களுக்கு முகம் கொடுக்கும் பெண்களுக்கு மருந்து மாத்திரைகள் பற்றி பல்வேறு நிலைப்பாடுகளும் எண்ணங்களும் உண்டு. பெரும்பாலும் அவர்கள் தங்கள் சுமைகளை நினைத்து கலங்கும்போது, அயற்ச்சியடையும்போது தீர்வாக நாடுவது மருந்து மாத்திரைகளையே என்கிறர, டார்ட்மண்ட் பல்கலைக்கழக்த்தின் உளவியலாளர் காரின் மான். உளவியல் ரீதியான அடிப்படையைக் கொண்ட சிக்கல்கள்களின் மேலோட்டமான அறிகுறிகளாக அமையும் , தூக்கமின்மை, தலைவலி, பதட்ட உணர்வு போன்றவற்றிற்கு மருத்துவரை நாடிச் செல்லும்போது, மருந்து மாத்திரை எழுதிக் கொடுத்தால் அதையே சிகிச்சையாக பெரும்பாலானோர் கருதுகின்றனர். வேறு சிலர் இதர ஆற்றுப்படுத்தல், பழக்க வழக்கங்களிலான மாற்றம் முதலிட சிகிச்சை வழிமுறைகள் பற்றி அறிந்தாலும். ஒரு மாத்திரை சாப்பிட்டா போச்சு, மருத்துவர் சொல்வதையெல்லாம் கேட்க பொறுமை நமக்கேது என்று ஒதுங்கிவிடுகின்றனர்.

எனவே மருந்துகளை உட்கொள்ளும்போது கவனம் தேவை. நோயின் மூல காரணத்தை அணுகி அதற்கான சிகிச்சை எடுப்பதே எப்போதும் முழுமையான குணமடைதலுக்கு உதவும். மாத்திரையை விழுங்கினால் நோயின் அறிகுறிகளை தற்காலிகமாக குணப்படுத்தலாம், ஆனால் அது நாளடைவில் அந்த மாத்திரைக்கு நம்மை அடிமையாக்கும் நிலைக்கு தள்ளும் அபாயம் உள்ளது. இதை நாம் மறக்கவேண்டாம். இந்த தகவல்களை எல்லாம் கேட்டு தலை வலிக்கிறது ஒரு ஆஸ்பிரின் போட்டால்தான் சரிப்படும் என்று யாரும் புறப்படவேண்டாம்.


1 2 3