இன்றைக்குள்ள மாணவர்கள் முதல் அவர்களது தாத்தாக்கள் வரை, உலகத்தின் கூரை என்றால், திபெத் என்று புவியியல் பாடத்தில் படித்திருப்பார்கள். கடல் மட்டத்துக்கு மிக உயரமான இடத்தில் அமைந்திருப்பதாலேயே திபெத்துக்கு இந்தப் பெயர்.
இது மட்டுமல்ல, வட துருவம் தென் துர்வம் தவிர்த்து மூன்றாவது துருவம் என்றும் திபெத் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடத்தில் இருப்பதால், இதன் தட்ப வெப்ப நிலை, எப்போதும் சிலு சிலுவென இருக்கும். பச்சைப் பசேலென்ற புல்வெளிகள், வானுயர நிற்கும் பனி மலைகள், ஒடையாய் உருவெடுத்து குதித்தோடி பாறையிலிருந்து கீழே விழும் நீர்விழ்ச்சிகள் என இயற்கை அண்ணையின் அழகான ஒரு அன்பளிப்பாய், கண்களுக்கு குளிர்ச்சியும், மனதுக்கு இதமும், உடலுக்கு புத்துணர்ச்சியும் தரும் நில அமைவை உடையது, திபெத்.
ஆனால் இன்றைக்கு சுருங்கிக்கொண்டிருக்கும் பனிமலைகள், உறைபனி நிலத்தின் உருகுதல், புல்வெளிகள் மஞ்சள் நிறமாதல், ஆறுகளின் வறட்சிமயமாக்கம் என திபெத்திலான உலக வெப்பமேறலின் பாதிப்புகளை ஆய்வு செய்வோர், பெரிதும் கவலைப்படுகின்றனர்.
1 2 3
|