• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-16 13:35:00    
உலகத்தின் கூரை

cri

உலக வெப்பமேறலின் கசப்பான, கொடுமையான முரண்களில் ஒன்று, இப்படி பனிமலைகள் வெப்பத்தால் உருகினாலும் அது நீர் தேவை மற்றும் வினியோகத்துக்கு ஆக்கப்பூர்வ பங்காற்றாது என்பதே. பனி மலைகள் உருகியோடும்போது அதிகமான நீர், வெப்பமான தட்பவெப்ப நிலையால் ஆவியாகி விடுகின்றன.

மட்டும்மல்ல வெப்ப நிலையின் அதிகரிப்பு திபெத்தின் நில அமைவில் குழப்பங்களியும் ஏற்படுத்துகிறதாம். சிங்காய் திபெத் நெடுஞ்சாலை வழியே செல்லும் பயணிகள், கடந்த சில ஆண்டுகளாக, குண்டும் குழியுமான சாலைப் பகுதிகளால் அவதியுறுகின்றனர்.

கடல் மட்டத்திலிருந்து 4700 மீட்டர் உயரத்தில் உள்ள ஒரு சிறிய நகரமான உடாலிங் என்பதை உதாரணமாகக் குறிப்பிடலாம். இந்த சிறிய நகரத்தை ஒட்டிய நெடுஞ்சாலை பகுதி மிக மோசமான நிலையில் உள்ளது. அசுரபலம் கொண்ட ராட்சதர்கள், ராட்சத ஆயுதங்கள் கொண்டு தாக்கியது போல காட்சியளிக்கும் இந்த நெடுஞ்சாலை பகுதி, இயற்கையின் திருவிளையாடலால் அப்படி ஆனது என்றால் நம்பமுடிகிறதா. இயற்கையின் இந்த திருவிளையாடலின் பின்னணியில் மனிதனின் தன்னலத்தால் உருவான செயற்கைத்தனங்கள் அணி வகுத்துள்ளது வேறு கதை. புவியின் மேற்பரப்புக்கு கீழே உறைந்துள்ள பனிப்படலம் உருகுவதால், திடமான பனி திரவமாக, மேற்பரப்பில் போடப்பட்ட சாலை, குமுங்கிவிடுகிறது, ஆகவே குண்டும் குழியுமாக காட்சியளிக்கிரது.

இந்த உறைபனி உருகுதலால் கடல் மட்டத்திலிருந்து உயரமான இடத்திலுள்ள தாவர வாழ்க்கைச் சூழலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 40 ஆண்டுகளில் உலக வெப்பத்தாலும், நீராவியதலாலும் ஏற்பட்ட நீரின் இழப்பு இப்பகுதியிலான நீர் இருப்பை குறைத்து புல்வெளிகலை வறட்சிகாணச் செய்துள்ளது என்கிறார் சீன அறிவியல் கழகத்தின் பனி மற்றும் விளைநிலப் பிரதேச சுற்றுச்சூழல் மற்றும் பொறியியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த அறிவியலாளர் லி யுவன்ஷுவோ.

கடந்த 15 ஆன்டுகளில் கடல் மட்டத்திலிருந்து உய்ரமான இடங்களிலுள்ள 15 விழுக்காட்டு புல்வெளிகளும், கால் பன்குதி சதுப்பு நிலங்களும் காணாமல் போயுள்ளன என்கிறார் லி யுவன்ஷுவோ.

சீனா உள்ளிட்ட பல நாடுகள் உலக வெப்பமேறலை தணிவுபடுத்த, வேகம் குறைக்க முயற்சிகளிஅ மேற்கொண்டுள்ளன. ஆனால் இந்த் அபிரச்சனையின் அளவு எவ்வளவு பெரிது என்றால், அனைத்து நாடுகளும் அனைத்து மக்களுன் இந்தப்பணியில் கைகோர்த்து செயல்படவேண்டும், அப்போதுதான் பயன் கிட்டும்.


1 2 3