• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-16 13:35:00    
உலகத்தின் கூரை

cri

அண்மையில் யாங்சு ஆற்றின் நதிமூலப்பகுதியிலான பனிமலைகள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக குறைந்து வருகின்றன, சுருங்கி வருகின்றன என்கிறார் சீன அறிவியல் கழகத்தைச் சேர்ந்த லி யாஜியே. இவர் நான்சிங் புவியியல் மற்றும் நீர்நிலையியல் நிறுவனத்தைச் சேர்ந்த அறிவியலாளாவார்.

சிங்காய் திபெத் இருப்புப்பாதையில் பயணிப்பவர்களுக்கு வழியில் காணப்படும் யூசு மலை உள்ளிட்ட 15 பனிச்சிகரங்களை பார்ப்பது ஒரு மகிழ்ச்சிகரமான, சிலிர்ப்பான அனுபவமாகும். ஆனால் யூசு மலையின் மேற்கே பனிமலை பள்ளத்தாக்கு பகுதிக்குள் நுழையும்போது, தற்போது 5000 மீட்டருக்கு மேல் பனிமலை இருப்பதற்கான அறிகுறியே காணமுடியவில்லை. பனி மலைக்கு பதிலாக, சிறிய ஓடைகளாக நீருற்றுகள் வழிந்தோடுவதை காணமுடிகிறது. மலையின் மறுபக்கத்தில் பனி மலையின் மிச்சம் மீதியை காணமுடிகிறதாம். ஒரு மனிமலையின் மறைதல், உருகுதல், இல்லாமல் போதலுக்கு நான்கு நிலைகள் உண்டு. இந்தக் குறிப்பிட்ட பனிமலை அதில் நான்காவது, இறுதிக்கட்டத்தில் இருக்கிறது என்பது துயரமான சேதி என்கிறார் லி யாஜியே.

சிங்காய் திபெத் பீடபூமி 36 ஆயிரம் பனி மலைகளுக்குச் சொந்தக்காரி என்று புகழ்பெற்று விளங்கியது. 50 ஆயிரம் சதுர கி மீ பரப்பளவிலான் ஐந்த 36 ஆயிரம் பனி மலைகள், சீனாவின் முக்கிய நதிகளுக்கும், தென்கிழக்காசியாவின் முக்கிட நதிகளுக்கும் ஊற்றுமூலமாய் அமைந்து, நீரை வாரி வழங்கிக்கொண்டுள்ளன. ஆனால் கடந்த 100 ஆண்டுகளில், இந்தப்பனிமலைகளின் பரப்ப் 30 விழுக்காடு குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலக வெப்பமேறலின் ஒரு தோராய மதிப்பீட்டின் படி தற்போதுள்ளதை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்தால், இந்தப் பனிபிரதேசத்தின் பரப்பளவு பாதியாகிவிடும் என்று எச்சரிக்கை தொனிக்க கூறுகின்றனர் அறிவியலர்கள்.

1 2 3