wang youdeஇன் தலைமையில், 1985ம் ஆண்டு, bei jitan வன நிர்வாகப் பகுதியில் பல சீர்திருத்த நடவடிக்கைகள்,மேற்கொள்ளப்பட்டன.
சீர்திருத்தம், வன நிர்வாகப் பகுதியின் பணியாளர்களின் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் மீண்டும் தூண்டியது. வனத்தொழில் பணியாளர்கள், அல்லும் பகலும் மரம் நடுகையில் ஈடுபட்டு, நீ முந்தி நான் முந்தி என்று போட்டிப்போட்டுக் கொண்டு, தங்களது கடமையை நிறைவேற்ற துவங்கினர். wang youdeஇன் முன்மொழிவுகளில், வன நிர்வாகப் பகுதியில் 10 பேர் இடம்பெறும் கூடை முடையும் தொழிற்சாலை நிறுவப்பட்டது. அவரது முயற்சியின் மூலம், இத்தொழிற்சாலைக்கு ஆப்பிள் பழக் கூடைகளை தயாரிக்கும் ஒப்பந்தத்தில் wang youde கையொப்பமிட்டார்.
சீர்திருத்தம் நடைமுறைபடுத்தப்பட்ட ஆண்டில், முழு வன நிர்வாகப் பகுதியிலும், மணல் தடுப்புவக்காக ஏறக்குறைய 400 ஹெக்டர் நிலப்பரப்புடைய காடு வளர்ப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. பசுமையான காடு, 72 விழுக்காட்டை எட்டியது. 90 ஆயிரம் யுவான் நிகர வருமானம் நனவாக்கப்பட்டது. இந்த புதிய முயற்சியில் பாலைவனப் பிரதேசத்தில் புதிய ரக மணல் தடுப்பு காட்டை wang youde மீண்டும் வளர்க்கத் துவங்கினார். அது, பாலைவனமயமாக்கத்தின் விரிவாக்கத்தை தடை செய்தது மட்டுமல்ல, வருமானத்தையும் கொண்டுவந்தது. இது, பணியாளர்களின் ஊக்கத்தை முழுமையாக தட்டி எழுப்பி உற்சாகப்படுத்தியது. அவர் கூறியதாவது
மரம் நடுகை மூலமான காடு வளர்ப்பு, கடுமையான பணியென கடந்த பல ஆண்டுகளில், பொது மக்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர், கருத்து தெரிவித்தனர். இப்போது, சீரான சுழற்சி நனவாக்கப்பட்டது. ஆப்பிள் முதலிய தொழில் பயிர்களை பயிரிடுவது, பணியாளர்களுக்கு வருமானத்தை கொண்டுவந்தது.
1 2 3
|