பாலைவனமயமாக்கம், பல்லாயிரக்கணக்கான ஹெக்டர் நிலப்பரப்பு விளை நிலங்களுக்கும் பொது மக்களின் கிராமங்களுக்கும் மஞ்சள் ஆற்றுக்கும் மிகப் பெரிய தீங்குகளை விளைவித்தது. இங்கு, 4 தேசிய நெடுஞ்சாலைகளும், இரு இருப்புப் பாதைகளும் பாலைவனத்தை முழுமையாக தாண்டியுள்ளன. தாவர மூல வளங்களையும் நெடுஞ்சாலையையும் இருப்புப் பாதையையும் மஞ்சள் ஆற்றையும் ying chuan huiஇன தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான பாதுகாப்பது, அனைத்து உயிரின வாழ்க்கை சூழல் பாதுகாப்பு மண்டலத்தின் பங்காகும்.
இப்போதைய bai jitan மணல் தடுப்பு வன பண்ணையின் சொத்து, மதிப்பு 1985ம் ஆண்டின் 50 இலட்சம் யுவானிலிருந்து தற்போது 30 கோடி யுவானாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, பணியாளரின் நபர்வாரி ஆண்டு வருமானம், 20 ஆயிரம் யுவானை எட்டியுள்ளது. மணல் தடுப்பு மற்றும் காடு வளர்ப்புப் பணியின் பெரும் சாதனையால், wang youde, வனப் பண்ணையின் பணியாளர்களின் மதிப்பை பெற்றுள்ளார்.
பணியாளர் ma xing guo கூறியதாவது
1991ம் ஆண்டு, படிப்பை முடித்துக்கொண்ட பிறகு, இங்கு வந்து நான் வேலைக்கு சேர்ந்தேன். அப்போது, இங்கு சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. நான் அறிந்த வரை, wang youde எளிமையான ஒரு மனிதர் என்று கண்டறிந்தேன்.
2008ம் ஆண்டு, wang youde, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ning xia hui இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தீப ஏந்தும் நபரானார். அவர் கூறியதாவது
பசுமையான ஒலிம்பிக், இவ்வாண்டு ஒலிம்பிக் தலைப்பாகும். எனவே, எமது வனத் தொழில் பணியாளர்கள், செவ்வனே செயல்பட வேண்டும். ஒரு ஒலிம்பிக் மரம் நட்டு, பத்து ஆயிரம்
மோ நிலப்பரப்புடைய ஒலிம்பிக் காடு வளர்த்து, பத்து ஆயிரம் மீட்டர் நீளமுடைய பசுமையான ஒலிம்பிக் தாழ்வாரத்தை கட்டியமைக்க வேண்டும் என நாங்கள் முன்வைத்தோம் என்றார் அவர். 1 2 3
|