பார்வையற்ற ஒருவர் பார்வையோடு தொடர்புடைய கூறுகளை பயன்படுத்துவதில்லை. ஆனால் அவர்களால் அதனையும் பயன்படுத்த முடியும் என்பது இந்த ஆய்வு மூலம் தெரிய வருகிறது. பார்வையற்றோர் மிக சிறப்பாக கேட்க்கும் திறனும், செவிப்புலனற்றோர் மிக தெளிவான பார்க்கும் திறனும் பெற்றிருப்பதை இது விளக்குகிறது. நமது முக்கிய பார்வை மண்டலம் தொடுதலாலும் தூண்டப்படுகிறது. அதனால் தான் கொசு நம் மேல் வந்து அமர்ந்தவுடன் அது இரத்தத்தை உறுஞ்சுவதற்கு முன்பே அதனை பார்க்காமலேயே அடித்து கொல்ல அல்லது விரட்ட நம்மால் முடிகிறதல்லவா!. ஆம். உலகிலுள்ள மனிதர்கள் எல்லாம் அசாதாரணமானவர்கள். சாதாரணமானவர்கள் இருந்தால் அவர்களை உடனே குணப்படுத்த வேண்டும் என்ற அறிஞர் ஒருவரின் மேற்கோள் உண்மையாக தோன்றுகிறது. 1 2 3
|