 யுச்சங் (Yucheng), யுன்ச்சி (Yunji), யுதியன் (Yudian)
சீன வரலாற்று பழங்கதை ஒன்றின்படி முன்பொரு காலத்தில் சீனாவில் பெருமழை வெள்ளமேற்பட்டு நாடே கதிகலங்கி கிடந்தததாம். மக்களனைவரும் வெள்ளத்தின்ம் தீவிரத்துக்கு அஞ்சி வீட்டில் அடங்கிக்கிடக்க, தாயு என்பவர் மட்டும், துணிச்சலோடு வெளியே வந்து, மக்களை அணித்திரட்டி, வெள்ளப்பேரிடரை எதிர்த்து போராடினாராம். அதன் பிறகு தாயு சீனாவை ஒன்பது நிர்வாகப் பிரதேசங்களாக பிரித்தாராம். காலப்போக்கில் அவரது பெயரின் அடிப்படையில் சீனா யுச்சங் (Yucheng) அதாவது யூவின் நகரம், யுன்ச்சி (Yunji) யுவின் அடிச்சுவடு அல்லது காலடி, யுதியன் (Yudian) யுவின் நிர்வாகம் என்றெல்லாம் அழைக்கப்பட்டது.
1 2 3
|