இந்த முறைமையின் மூலம், மிக குறுகிய காலத்தில் நிலநடுக்கம் பற்றிய விவரமான தகவல்களை அரசு மற்றும் பொது மக்களுக்கு அறிவிக்கலாம். மீட்புதவிப் பணிக்கு அது கூடிய அளவில் நேரம் கொடுக்கும் என்று சீன நிலநடுக்க கண்காணிப்பு மையத்தி்ன் ஆய்வாளர் சுன் ஷி ஹுங் கூறினார். ஆனால், சில வேளையில் பூர்வாங்க ரீதியான தரவுகளுக்கும் நுணுக்கமாக ஆராய்ந்த பின் வெளியிடப்படும் தரவுகளுக்கும் இடையில் வித்தியாசம் நிலவுகின்றது என்று அவர் கூறினார். அவர் கூறியதாவது
தற்போது, நாம் பயன்படுத்தும் அளவு ஒரு சராசரியான அளவாகும். அதாவது பல்வேறு நிலையங்கள் பதிவு செய்த நிலநடுக்க அலைகளின் படி கிடைத்த சராசரி தகவலாகும். மேலும் அதிகமான நிலையங்களின் பதிவுகளை சேகரித்தால், இந்த முடிவு மாறக் கூடும் என்றார் அவர்.
எடுத்துக்காட்டாக, 3 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்து மாக்கடல் கொந்தளிப்பு, ஆரம்பக் காலத்தில் அறிவிக்கப்பட்ட 8.5 என்ற அளவிலிருந்து 2 முறை திருத்தப்பட்டு, இறுதியில் 9ஆக மாற்றப்பட்டது.
1 2 3
|