திபெத் தொடர்ந்து திறந்துவைக்கப்பட்டதுடன், Sangmo கிராம மக்கள், கிராமப்புற வேளாண்மையை வளர்க்கத் துவங்கினர். 2002ம் ஆண்டில், நபர்வாரி வருமானம், 2 ஆயிரத்து 500 யுவானை எட்டியது. இது விவசாயிகள் மற்றும் ஆயர்களின் முந்தைய நபர்வாரி வருமானத்தை விட 430 யுவான் அதிகமாகும். லாசாவிலுள்ள சுற்றுலா நிறுவனம் ஒன்று, Sangmo கிராமப்புறத்தின் மீது நம்பிக்கை கொண்டது. இந்த நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் அப்போதைய Sangmo கிராமத்தின் Badroஐ சந்தித்தார். இது பற்றி Badro கூறியதாவது
2002ம் ஆண்டு, இச்சுற்றுலா நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் எமது கிராமத்துக்கு வந்தார். எமது கிராமத்தில், Sangmo நாட்டுப்புற சுற்றுலா நிறுவனம் ஒன்று நிறுவலாம் என்று அவர் கூறினார். இது ஒரு நல்ல திட்டம் என்று ஆய்வின் மூலம், எமது கிராம மக்கள் கண்டறிந்தனர். மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கு துணை புரியும் என்பதால் நாம், நல்ல கொள்கையை மேற்கொண்டு, சில ஆண்டுகளின் நில குத்தகையை வசூலிக்கவில்லை என்றார் Badro.
1 2 3 4 5
|