சுற்றுலா நிறுவனம் நிறுவப்பட்ட பின், அவ்வாண்டில், 2 ஆயிரத்து 600 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், Sangmo கிராமத்தில் பயணம் மேற்கொண்டனர். இதனையடுத்து, ஆண்டுதோறும் Sangmo கிராமப்புறத்துக்கு வந்து, சுற்றுப் பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை, அதிகரித்து வருகின்றது. 2007ம் ஆண்டு, மொத்தம் 30 ஆயிரம் பயணிகள், இந்த கிராமத்தில், சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். இந்த கிராமத்தின் மக்களது திங்கள் வருமானம், 300 யுவானிலிருந்து 800 யுவானுக்கு அதிகரித்தது.
புள்ளி விபரங்களின் படி, முழு திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில், 2007ம் ஆண்டு, சுற்றுலாச் சேவையி்ல் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் ஆயர்களின் எண்ணிக்கை, 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சுற்றுலா மூலமான மொத்த வருமானம், 22 கோடி யுவானை எட்டியுள்ளது. சுற்றுலாச் சேவையி்ல் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் ஆயர்களின் நபர்வாரி நிகர வருமானம், 6 ஆயிரத்து 300 யுவானாகும். முழுப் பிரதேசத்தில் விவசாய்கள் மற்றும் ஆயர்களின் நபர்வாரி நிகர வருமானத்தை விட இது, 2 மடங்கு அதிகமாகும். திபெத் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியுடன் திபெத் கிராமப்புறச் சுற்றுலாப் பயணம், மேலும் வலிமையாகியது என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுற்றுலா ஆணையத்தின் துணைத் தலைவர் Tanor கூறினார். அவர் மேலும் கூறியதாவது
குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளி்ல், Sangmo கிராமப்புறச் சுற்றுலா விரைவாக வளர்ந்து வருகின்றது. சுற்றுலாச் சேவையில் சேர்வதன் நன்மையை மக்கள் உணர்ந்து கொண்டனர் என்ரார் Tanor. 1 2 3 4 5
|