Cheng Du நகரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள "மருத்துவ நிபுணர்கள் குடியிருப்புப் பிரதேசத்தில் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதென்ற நடவடிக்கையில்" 76 வயதான முதியோர் He நேரடியாக நலன் பெற்றுள்ளார். புதன்தோறும் காலை, தமது குடும்பத்தினரின் துணையுடன், அவர் Xin Hua குடியிருப்புப் பிரதேச மருத்துவ சேவை மையத்துக்குச் சென்று, Cheng Du நகரின் மூன்றாவது மருத்துவ மனையின் நரம்பு துறைத் தலைவர் Li Qingகிடமிருந்து சிகிச்சை பெறுகின்றார். அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் கூறியதாவது:
"மூன்றாவது மருத்துவ மனையில் நிபுணரிடமிருந்து சிகிச்சை பெறுவதற்கு, குறைந்தது ஒரு மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. இங்கு 20 நிமிடம் மட்டுமே காத்திருக்கின்றேன். இங்கே சிகிச்சை பெறுவதற்கான பதிவு கட்டணமும் இல்லை" என்றார், அவர்.
கடந்த சில ஆண்டுகளாக, Cheng Du நகரில் பல்வகை மருத்துவ அமைப்பு முறைகளை நிறுவி, மருத்துவ நிபுணர்கள் குடியிருப்புப் பிரதேசத்தில் சிகிச்சை அளிப்பது முதலியவற்றின் மூலம், குடியிருப்புப் பிரதேச மருத்துவத் தரம் உயர்ந்துள்ளது. மிகப் பல பொது மக்கள் குடியிருப்புப் பிரதேசத்தில் சிகிச்சை பெற முடியும். அது மட்டுமல்ல, மருத்துவ கட்டணம் அதிகமில்லை. Cheng Du நகரின் சுகாதார அலுவலகம் அண்மையில் வெளியிட்ட தரவின் படி, 2007ஆம் ஆண்டு, குடியிருப்பு மருத்துவ சேவை மையத்திலிருந்து, 59554 நோயாளிகள் மேல் நிலை மருத்துவ மனைகளுக்கு அனுப்பப்பட்டனர். 3693 நோயாளிகள் குடியிருப்புப் பிரதேச மருத்துவ சேவை மையத்துக்கு அனுப்பப்பட்டு குணமடைந்தனர். "சிறு நோய்களால் பீடிக்கப்படுவோர் குடியிருப்புப் பிரதேசத்தில் சிகிச்சை பெறுவது, கடும் நோயால் பீடிக்கப்படுபவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவது, நோயாளிகள் குடியிருப்புப் பிரதேசத்தில் குணமடைவது" என்ற கட்டமைப்பு அடிப்படையில் உருவாகியுள்ளது. முதியோரினால் அழைக்கப்படும் "அன்பு பொத்தான்" என்ற ஒரு விசைப் பலகை உண்டு. இதில் நான்கு பொத்தான்கள் அல்லது விசைகள் உள்ளன. குடியிருப்புப் பிரதேச குடிமக்கள் கமிட்டி, மருத்துவ சேவை மையம், வானிலை முன் அறிவிப்பு, இதர விவகாரம் ஆகியவற்றை நான்கு பொத்தான்கள் முறையே குறிக்கின்றன. தங்களது தேவைக்கேற்ப, பொத்தானை அழுத்தலாம். மருத்துவர் Ye Jing Xue செய்தியாளரிடம் கூறியதாவது:
"குடிமக்கள் உரிய பொத்தானை அழுத்துவதன் மூலம், எங்கள் மருத்துவ மனையின் தொலைபேசி எண்ணை போட முடியும். குடிமக்களின் தொலைபேசி எண்ணைப் பார்த்த பின், உடனடியாக அவருக்கு தொலைபேசி மூலம் பதிலளிக்கின்றோம். அவருக்கு ஏற்படும் நோய் நிலைமை பற்றி அறிந்தப் பின், அவருக்கு சிகிச்சை அளிக்கின்றோம்" என்றார், அவர்.
1 2 3
|