கடும் நிலநடுக்கத்துக்கு பிறகு, qiang இனப் பண்பாட்டின் மைய மண்டலம், மிக கடுமையாக அழிந்து போயுள்ளது. சீனாவின் ஒரே ஒரு qiang இன தன்னாட்சிப் பிரதேசமான bei chuan மாவட்டநகரம், முற்றாக நாசமாகியுள்ளது. அங்கு, சுமார் 50 விழுக்காட்டு மக்கள் உயிரிழந்தனர். தேசிய கட்டிடங்கள் தரைமட்டமாகின. பரம்பரை பரம்பரையாக கட்டிக்காத்து வந்த உயிரினச்சுற்றுச்சூழல், மறைந்து விட்டது. நாட்டுப்புறப் பண்பாட்டுப் பொருட்கள், ஆடைகள், இசைக்கருவிகள் இடிபாடுகளில் சிக்கி அழிந்து போயின. சீனாவில் மட்டுமே இருக்கின்ற சில qiang இன அருங்காட்சியகங்களும் நாசமாகியுள்ளன. 1 2 3 4
|