• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-22 09:18:23    
குகை அருங்காட்சியகம்

cri

அன்பால் எழுந்த மனைவி

நாம் நன்றாக இருக்கின்றபோது நண்பர்கள் பலர் நம்மை கண்டுகொள்வர். நாம் நன்றாக இல்லாதபோது அதில் உண்மையானவர்களை நாம் கண்டு கொள்வோம் என்ற மேற்கோளை நாம் கேட்டிருக்கலாம். அவ்வாறு உண்மையான அன்பை பொழிந்துள்ள தலைசிறந்த கணவராக சீனாவின் Chen Dulin திகழ்கின்றார். அவரது தன்னிகரற்ற கண்காணிப்பால் 30 ஆண்டுகால கோமா என்ற ஆழ்நிலை மயக்கத்திலிருந்து, அவரது மனைவி நலமாகியுள்ளார். Hubei மாநிலத்தின் E'zhou வில் வாழ்கின்றவர்கள் தான் Chen Dulin, Zhao Guihua தம்பதியர். Zhao Guihua 30 ஆண்டுகளுக்கு முன்னர் விபத்தில் ஆழ்நிலை மயக்கமடைந்தார். இரண்டு அறுவை சிகிச்சைக்கு பின்னரும் அவருடைய நிலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. ஆனாலும், Chen Dulin தளர்ந்துவிடவில்லை. அவரை வீட்டிற்கு கொண்டு சென்று பால், முட்டை மற்றும் நீர்ம உணவு வகைகளை மட்டுமே ஊட்டி சரிவர கவனித்து வந்தார். திடீரென Zhao Guihua ஆழ்நிலை மயக்கத்திலிருந்து எழுந்தார். தனது கணவரின் ஆழ்ந்த அன்பை நினைத்து பெருமிதம் அடைந்தார். Hubei மாநிலத்தின் மாதிரி கணவர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Chen Dulin அவர்களின் பராமரிப்பு தான், அவரது மனைவியை ஆழ்நிலை மயக்கத்திலிருந்து எழ செய்துள்ளதாக மருத்துவர்கள் நம்புகின்றனர். 77 வயதிலும் கூட, தனது வாழ்விலான அன்பை தான், அவர் ஒவ்வொரு நாளும் பேசுகிறார்.


1 2 3