
நாய்களை அடிக்காதீர்கள்
மயிர் நீர்ப்பின் உயிர்வாழா கவரி மான் என்று கவரி மானின் பெருமையை கூறுவார்கள். தனது உடலில் உள்ள முடி விழுந்துவிட்டால் கூட அது தனது உயிரை மாய்த்து கொள்ளுமாம். அடிவாங்கினால் தனது உயிரை மாய்த்து கொள்ளும் நாய் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். Zhejiang மாநிலத் தலைநகரான Hangzhou வை சேர்ந்த Pan என்பவர் தனது நாய் பிற நாயோடு சண்டயிட்டதால் அதனை அடித்து விட்டார். உடனே அந்நாய் தன்னை தானே கடித்துக்கொண்டு இறந்துவிட்டது. அச்செயலை பார்த்தபோது தான் 20 ஆண்டுகளாக திபெத் mastiffs வகை நாய் வளர்ப்பில் நல்ல அனுபவம் மிக்க அவரது நண்பர் கூறியிருந்தது Pan னுக்கு நினைவுக்கு வந்ததாம். அதாவது திபெத் mastiffs வகை நாய்கள் சுயமதிப்பு அதிக கொண்டவையானதால் நாய்களின் அரசன் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று பிற நாய்களின் முன்னால் அடிக்கப்பட்டால், அது மிகவும் வெட்கப்பட்டு, தனது மரியாதையை காப்பாற்றிக் கொள்ளும் விதமாக தன்னைத்தானே மாய்த்து கொள்ளுமாம். அடிப்பட்டால் உயிர்வாழா நாய் இது.
1 2 3
|