Desta Adesa என்பவர் அந்த மாணவர்களில் ஒருவராவார். மின்னியல் துறையில் அவர் ஈடுபடுகின்றார். சீனாவில் அவர் 2 ஆண்டு காலமாக பயின்றார். இவ்வாண்டு கல்வி சான்று பெற்று அவர் நாட்டுக்குத் திரும்புவார். அவர் கூறியதாவது
எத்தியாபியாவில் இருந்த போது, நான் ஆசிரியராக பணி புரிந்திருந்தேன். நாட்டுக்குத் திரும்பிய பின், சீனாவில் கற்றுக்கொண்ட அறிவுகளை எனது மாணவர்களுக்கு கற்பிப்பேன் என்றார் அவர்.
இவ்வாண்டின் முதல் பாதியில் அந்தக் கல்லூரி துவங்கப்படும். முதல் கட்டத்தில் இயந்திரம், மின்னியல், மின்னணு, உந்து வண்டி, கணிணி, நெசவு, ஆடை ஆகிய துறைகள், சுமார் 300 மாணவர்களைச் சேரும்.
அடுத்த சில ஆண்டுகளில், சுமார் 3000 மாணவர்கள் அக்கல்லூரியில் கல்வி பயில்வர். கட்டிடம், பாதா மற்றும் பாலக் கட்டிட இயல், நிலப்பட வரைத்தல் முதலிய எத்தியோபியாவில் அவசரமாக தேவைப்படும் துறைகள் சேர்க்கப்படும். மேலும், இரு நாட்டு மக்களுக்கிடை புரிந்துணர்வையும் நட்புறவையும் மேலும் அதிகரிக்கும் வகையில், உடன்படிக்கையின் படி, அந்தக் கல்லூரியில் சீன மொழி கல்வி வகுப்பும் நடத்தப்படும். 1 2 3
|