திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில், விவசாயிகளும் ஆயர்களும் திபெத் மொழியிலான செல்லிடபேசியை பெரிதும் வரவேற்கின்றனர். இப்போது, செல்லிடபேசியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கிராமங்களில் ஏறக்குறைய ஒவ்வொரு குடும்பத்துக்கும், செல்லிடபேசி உண்டு. எனவே வசதியாக இருக்கின்றது என்று Da zi மாவட்டத்திலுள்ள bang tui கிராம கட்சிக் கமிட்டியின் செயலாளர் Nyima Dondrup கூறினார். அவர் மேலும் கூறியதாவது
முன்பு, மக்கள் செல்லிடபேசியை பயன்படுத்தினாலும், சீன மொழியை அறியாமல் இருந்ததால், பல வழிகளில் அவர்கள் சரியாக அதை பயன்படுத்த முடியவில்லை. இப்போது, திபெத் மொழியிலான செல்லிடபேசி தொடர்புக்கு வசதியாக இருக்கின்றது. இவ்வண்டு, எனது அப்பாவுக்கு 76 வயதாகிறது. அவர், செல்லிடபேசி பயன்படுத்துகிறார்.
திபெத் மொழியை வளர்த்து அதன் பயன்பாட்டை பரவலாக்குவதில், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள விவசாயிகளும் ஆயர்களும் வசதி பெற்றுள்ளனர். திபெத் மொழியின் வளர்ச்சி, தகவல் மயமாக்க காலத்தில் நுழைந்துள்ளது. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பதிப்பக மற்றும் மொழிபெயர்ப்பு ஆணையத்தின் தலைவரும் திபெத் மொழி பணிக்குழுவின் இயக்குநருமான Tsewang Banjor கூறியதாவது
திபெத் மொழி, மிகத் தொண்மையானது. இம்மொழியின் எழுத்துக்களும். தொண்மையானவை. நவீன சமூக வாழ்க்கையில் இம்மொழியின் முறைமை மற்றும் வரையறைகள் தகவல் மயமாக்கம் செய்யப்படுவது நனவாக்கப்பட வேண்டும். இதுவே, எதிர்காலத்தில் திபெத் மொழியின் வளர்ச்சி திசையாகும்.
1 2 3
|