எதிர்காலத்தில் சீனா சந்தைப் பொருளாதாரத் தத்துவத்தை செயல்படுத்தி, உலகப் பொருளாதாரத்தில் இணைய தூண்டுவது, தமது வாழ்நாளின் இலட்சியமாக மாறும் என்று Long Yong Tu அப்போது நினைக்கவே இல்லை.
1978ஆம் ஆண்டு, சீனாவில் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி நடைமுறைக்கு வரத் துவங்கியது. நியூயார்க்கில் உள்ள ஐ.நாவின் தலைமையகத்துக்கு Long Yong Tu அனுப்பப்பட்டார். அதற்கு பிந்திய 7 ஆண்டுகளாக, ஐ.நாவில் உள்ள சீனப்பிரதிநிதிக்குழுவின் மொழிபெயர்ப்பாளராகவும், ஐ.நா வளர்ச்சி திட்ட ஆணையகத்தின் அதிகாரியாகவும் அவர் வேலை செய்தார். சில பத்து நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து வேலை செய்ததால், அவரது விரிவான பார்வையும் பணி அனுபவமும் அதிகரித்தன. மட்டுமல்ல, சர்வதேச பார்வையில், பிரச்சினைகளை ஆய்வுசெய்து, தீர்க்கவும் அவர் தெரிந்து கொண்டார். அவர் கூறியதாவது:
"வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன், முதலில் அந்நாடுகளின் வரலாறு மற்றும் பண்பாட்டை அறிந்து கொண்டு, பிரதிநிதிகளின் குணத்தை ஆய்வு செய்வேன். இவ்வாறு செய்வதால் பேச்சுவார்த்தை நடத்துகிற போது, பண்பாடு, குணம் ஏன் கருத்தியல்களில் கூட நிலவும் தடைகளை நீக்க முடியும். குறிப்பிட்ட பிரச்சினைகள் பற்றி ஆழமாக பேச்சுவார்த்தை நடத்த முடியும்" என்றார் அவர்.
1 2 3
|