ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு
2022-09-30 16:18:34

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலிலுள்ள ஒரு கல்வி மையத்தில் செப்டம்பர் 30ஆம் நாள் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

காபூல் காவற்துறையின் செய்தித் தொடர்பாளர் கலீத் சத்ரன் கூறுகையில், முதற்கட்ட புள்ளிவிவரங்களின்படி, இதில் குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர். சுமார் 30 பேர் காயமுற்றனர் என்றார்.

மேலும், இக்குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது, அங்கே பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வுக்கான ஆயத்தப் பணி நடைபெற்று கொண்டிருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.