ஜப்பானில் பயணம் மேற்கொண்டுள்ள நேட்டோவின் தலைமைச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்கும் ஜப்பான் தலைமையமைச்சர் ஃபுமியோ கிஷிடாவும் ஜனவரி 31ஆம் நாளிரவு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இதில் கடல் பாதுகாப்பு, இணையதளம், ஆயுதக் கட்டுப்பாடு முதலிய துறைகள் சார்ந்து இரு தரப்பும் ஒத்துழைப்பை மேற்கொள்ளவுள்ளதாக அவர்கள் அறிவித்தனர். அதோடு, சீனாவின் இராணுவ ஆற்றல், தைவான் பிரச்சினை ஆகியவை தொடர்பாக கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டன.