© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் செப்டம்பர் 30ஆம் நாள் முற்பகல் மக்கள் மாமண்டபத்தில் சி919 பெரிய ரக பயணியர் விமானத் திட்டப்பணிக் குழுவின் பிரதிநிதிகளுடன் சந்தித்துரையாடி, இத்திட்டப்பணியின் சாதனை கண்காட்சியைப் பார்வையிட்டார். அவர் கூறுகையில், சீனா தயாரித்த பெரிய ரக விமானம் வானில் பறந்து செல்வது, நாட்டின் குறிக்கோள், தேசத்தின் கனவு மற்றும் மக்களின் எதிர்பார்ப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கிறது என்று தெரிவித்தார். நாட்டின் அமைப்பு முறை சார் மேன்மைகளை வெளிக்கொணர்ந்து, பாதுகாப்பு மற்றும் தரம் முதன்மை என்ற கொள்கையைக் கடைப்பிடித்து, முக்கியமான தொழில் நுட்ப ஆய்வில் மேலும் பெரும் முன்னேற்றம் அடைய வேண்டும். தயாரிப்புத் துறையில் வல்லரசு கட்டுமானத்தை முன்னெடுத்து, நவீன சோஷலிச நாட்டைப் பன்முகங்களிலும் கட்டியமைப்பதற்கும், சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சியை நனவாக்குவதற்கும் விடா முயற்சியுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.