உள்நாட்டில் இனவெறி பாகுபாட்டைத் தீருங்கள்:அமெரிக்காவுக்கு சீனா வேண்டுகோள்
2022-10-04 17:06:27

அமெரிக்காவிலுள்ள ஆப்பிரிக்க வம்சாவழியினர், சட்ட அமலாக்கத்தில் நியாயமற்ற அணுகுமுறையை எதிர்கொண்டு வருகின்றனர். தேசிய அமைப்பு முறையில் இனவெறி, பாகுபாடு, காவற்துறை வன்முறை முதலிய பிரச்சினைகளைப் பயனுள்ள முறையில் அமெரிக்கா தீர்க்க வேண்டும் என்று சீனப் பிரதிநிதி ஜியாங் டுவேன் 3ஆம் நாள் ஐ.நா மனித உரிமை செயற்குழுவின் 51ஆவது கூட்டத் தொடரில் வேண்டுகோள் விடுத்தார்.

அவர் கூறுகையில், “வெள்ளை இனத்தவருக்கே முன்னுரிமை”என்ற சிந்தனை இன்னும் நிலவி வருகிறது. அமெரிக்காவில் கோடிக்கணக்கான ஆப்பிரிக்க வம்சாவழியினர், பல்வேறு பாகுபாடு மற்றும் அநீதியைச் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.