நார்ட் ஸ்ட்ரீம் குழாய் கசிவு மீது ஸ்வீடன் குற்றவியல் விசாரணை
2022-10-04 17:02:50

நார்ட் ஸ்ட்ரீம் இயற்கை எரிவாயு குழாய் கசிவுக்கு அருகிலுள்ள கடல் பரப்பை மூடி, குற்றவியல் விசாரணையை மேற்கொள்ளப்படும் என்று ஸ்வீடன் வழக்கறிஞர் மன்றம் 3ஆம் நாள் அறிவித்தது.

ஸ்வீடன் கடலோர காவல் படை 3ஆம் நாளிரவு வெளியிட்ட அறிக்கையின்படி, நார்ட் ஸ்ட்ரீம் குழாய் கசிவு இடத்துக்கு 5 கடல் மைல் சுற்று பரப்பில், கப்பல் போக்குவரத்து மற்றும் நிறுத்தம், நீரில் முக்குளித்தல், மீன்பிடித்தல், புவிப் பெளதிகவியல் ஆராய்ச்சி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.