இலங்கை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை உரிய முறையில் தீர்க்க வேண்டும்
2022-12-05 19:41:49

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க சர்வதேச நாணய நிதியக் குழு இந்த வாரத்தில் சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளது. இலங்கை எதிர்கொண்டுள்ள இன்னல்களுக்கும் அறைகூவல்களுக்கும் சீனா எப்போதும் முக்கியத்துவம் அளிக்கின்றது. தொடர்புடைய நிதி நிறுவனங்கள் இலங்கை தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளை உரிய முறையில் தீர்ப்பதற்குச் சீனா ஆதரவளிக்கின்றது. தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள் சீனாவுடன் இணைந்து, தற்போதைய இன்னல்களை இலங்கை சமாளிப்பதிலும், கடன் சுமையைத் தணிப்பதிலும், தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்குவதிலும் ஆக்கப்பூர்வமாகப் பங்காற்ற வேண்டும்  என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவோ நிங் 5ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.