© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ஷென்சோ-14 விண்கலம் டிசம்பர் 4ஆம் நாளிரவு 8 மணி 09 நிமிடத்தில் வெற்றிகரமாக புவியில் தரையிறங்கியது. ஷென்சோ-14 விண்கலப் பயணத் திட்டப்பணி முழுமையாக வெற்றி அடைந்ததை இது காட்டுகிறது.
புவிக்குத் திரும்பிய ச்சென்தொங், லியூயாங், சாய் ஷுசே ஆகிய 3 விண்வெளி வீரர்கள் விமானம் மூலம் 5ஆம் நாள் அதிகாலை பெய்ஜிங்கை வந்தடைந்தனர். விண்வெளியில் 200க்கும் அதிகமான நாள்கள் பணியில் ஈடுப்பட்ட சீனாவின் முதலாவது விண்வெளி வீரர் என்ற பெருமையை ச்சென் தொங் பெற்றுள்ளார்.